Monday, 13 August 2018

சுதந்திரக் கவிதைகள்

சுதந்திர தின கவிதைகள்



நாம் பிறந்த மண்ணிலே அடிமையாக கிடந்திருந்தோம்
           விடிவெள்ளி தோன்றிடவே மகிழ்ச்சியாக எழுந்திருந்தோம்
வீரர் பலர் தோன்றிடவே  அச்சம் இன்றி எதிர்த்து நின்றோம்
          பாரதியார் பாடிடவே பாரதத்தை புரிந்துகொண்டோம்
எம் நாடு என உரைக்க குரல் தன்னை உயர்த்தி நின்றோம்
          கொடி தன்னை கையில் ஏந்தி வந்தே மாத்திரம் முழக்கமிட்டோம்
வெள்ளையனே வெளியேறு என உரைத்து கூச்சளிட்டோம்
         நடு இரவில் சுதந்திரத்தை பெற்றிடவே மகிழ்ந்திருந்தோம்
சுதந்திரதத்தை பேணி காக்க அயராது உழைத்து நிற்போம் 

வீரர் பலர் காத்து நின்ற சுதந்திரம் 
       கொடியை ஏற்றி நின்ற எங்கள் சுதந்திரம்
வெள்ளையனை வெளியேற்றிய சுதந்திரம்
      பல வீரர்களால் கிடைத்த எங்கள் சுதந்திரம்
எம் நாடு என உரைத்த சுதந்திரம்
      பெண்களையும் காத்து நின்ற சுதந்திரம்
பாரதியார் பாடி வந்த  சுதந்திரம் 
     எங்களையும் பாட வைத்த சுதந்திரம்

                            
                                                                                       🌷.கனிஷ்கா

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....