சுதந்திர தின கவிதைகள்
நாம் பிறந்த மண்ணிலே அடிமையாக கிடந்திருந்தோம்
விடிவெள்ளி தோன்றிடவே மகிழ்ச்சியாக எழுந்திருந்தோம்
வீரர் பலர் தோன்றிடவே அச்சம் இன்றி எதிர்த்து நின்றோம்
பாரதியார் பாடிடவே பாரதத்தை புரிந்துகொண்டோம்
எம் நாடு என உரைக்க குரல் தன்னை உயர்த்தி நின்றோம்
கொடி தன்னை கையில் ஏந்தி வந்தே மாத்திரம் முழக்கமிட்டோம்
வெள்ளையனே வெளியேறு என உரைத்து கூச்சளிட்டோம்
நடு இரவில் சுதந்திரத்தை பெற்றிடவே மகிழ்ந்திருந்தோம்
சுதந்திரதத்தை பேணி காக்க அயராது உழைத்து நிற்போம்
வீரர் பலர் காத்து நின்ற சுதந்திரம்
கொடியை ஏற்றி நின்ற எங்கள் சுதந்திரம்
வெள்ளையனை வெளியேற்றிய சுதந்திரம்
பல வீரர்களால் கிடைத்த எங்கள் சுதந்திரம்
எம் நாடு என உரைத்த சுதந்திரம்
பெண்களையும் காத்து நின்ற சுதந்திரம்
பாரதியார் பாடி வந்த சுதந்திரம்
எங்களையும் பாட வைத்த சுதந்திரம்
🌷.கனிஷ்கா
No comments:
Post a Comment