இயற்கை
மண் வளமும் நீர் வளமும் பூமியிலே நிறைந்திருக்க,
பசுமை தனில் மண் மேலே போர்வை போல போற்றிருக்க.
காற்று தனில் வீசையிலே மரங்களெல்லாம் சிரித்துருக்க,
தரை மீது கோபுரமாய் மலைகலெல்லாம் உயந்திருக்க.
அருவியிலே நீர் நிறைய பெருக்கெடுத்து ஓடிருக்க,
ஆடு மாடு கோழி எல்லாம் அற்புதமாய் வாழ்ந்திருக்க.
உழமையிலே எம் நாடு பெருமை பெற்று நிலைத்திருக்க,
இயற்கை அன்னை நீ கொடுத்த அத்தனைக்கும் நன்றியம்மா.
No comments:
Post a Comment