தன்னை அறிதல்
யாழினி நீ ஏன் பெயர் கொடுக்க வில்லை ? என ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடை என்ன கூறுவது என தெரியாமல் நின்றாள்.
நாளை ஒரு நாள் தான் இருக்கிறது எண்ணி முடிவு சொல் என்று
கூறியவாறே வகுப்பிலிருந்து வெளியே சென்றார்.
யாழினி உன் மீது நாங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்
உன் அழகான கையெழுத்தும், செறிவான கருத்தும் கட்டுரை போட்டியில்
உனக்கு பரிசு பெற்று தருமல்லவா , ஆனால் நீயோ போட்டியில்
கலந்து கொள்ள மருக்கிறாய் . என்ன காரணம்? என்று அவருடைய தோழிகள் வினாவினர்.
எனக்கு போட்டியில் கலந்து கொள்வது என்றாலே மிகவும் அச்சமாக
உள்ளது .நீங்கள் நினைப்பது போல் என்னால் சிறப்பாகச் செய்யமுடியுமா? என்று தெரியவில்லை. என் கட்டுரைக்கு பரிசு கிடைக்க வில்லையென்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று
யாழினி அவர்களுக்கு பதிலளித்தல்.
நீங்க யாழினிய இருந்த என்ன செய்வீர்கள் ? சிந்தனை செய்க
No comments:
Post a Comment