Thursday, 2 August 2018

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழி.காலத்தால் மூத்தமொழி , தனித்தன்மையால்
மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது.திருத்திய பண்பும் ,சீர் திருத்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச்செம்மொழியம்.

நிலைத்த மொழி

உலகில் ஆரயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர்
மொழிநூலார். இவற்றுள் இலக்கண இலக்கிய வளமுடைய மொழிகள்
மூவாயிரம் ஈராயிரமண்டிற்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ்,சீனம், சமற்கிருத்தம், இலத்தின் ,ஈப்ரு, கிரேக்கம் , ஆகியன

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழமையும் , வளமையும், மட்டும் போதா அம்மொழி ,பேச்சு மொழியாக ,எழுத்துமொழியாக, ஆட்சிமொழியாக ,நீதிமன்ற மொழியாகப், பயிற்றுமொழியாக நிலைபெற்றிடல் வேண்டும்.

உலக  இலக்கியங்களுள் முத்தன்மை  பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.இவற்றின் மொத்த அடிகள்26,350. அக்காலத்தே  இவ்வளவிற்கு விரிவாக உருவாக்க பட்ட  இலக்கியங்கள்  உலகில் வேறு
எமமொழியிலும் இல்லை  என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த
கமில்சுவலப்பில் என்னும் செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் முடிபு

இவ்வாறு செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி தமிழ் மொழி  தமிழைச்
செம்மொழியான அறிவித்தல்வேண்டும். என்ற முயர்ச்சி 1901 இல்
தொடங்கி 2004 வரைத் தொடர்ந்தது.நடுவனஅரசு 2004 ஆம் ஆண்டு
அகடோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது

No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....