Friday, 3 August 2018

சிலப்பதிகாரம் கதை பாடல்கள்

                                    மதுரைக்  காண்டம்
                                    
      வாழியெம் கொற்கை வேந்தே  வாழி
      தென்னம்  பொறுப்பின்  தலைவ  வாழி
      செழிய  வாழி     தென்னவ    வாழி
       பழியோடு   படராப் பஞ்சவ  வாழி
      அடர்த்தெழு  குருதி.  யாடங்காய் பசுந்தணிப்

      
      பிடர்தலைப் பீடம்  எரிய    மடக்கொடி
      வெற்றிவேல்  தடக்கை  கொற்றவை அல்லள்
      அறுவர்க்   கிளைய  நங்கை  இறைவனை
      ஆடல்கண்  டருளிய  அணங்கு சுருடைக்
       கானகம் உகந்த  காளி . தாருகன்
   
       பேரூரங்  கிழிந்த பொண்ணு. மல்லள்
        சீற்றனள்  போலும் செயிர்த்தனள்  போலும்
        பொற்றொழிற் சிலம்பொன்  றேந்திய  கையாள்
        கணவனை  இழந்தாள்  கடையகத் தாளே, என
        வருக  மற்றவள்  தருக  ஈங் கென

       வாயில் வந்து கோயில் காட்டக்
       கோயில் மன்னனைக் குருக்கினள் சென்றுழி
       நீர்வார் கண்ணை  எம்முன் வந்தோய்
       யாரை யோனி மடக்கொடி யோய்எனத்
       தேரா மன்னா செப்புவ துடையேன்

       எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
        புள்ளுறு புன்கண்  தீர்த்தோன் அன்றியும்
        வாயிற் கடைமணி நடுநா  நடுங்க
       ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
        அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

       பெரும்பெயர்ப்  புகாரென்  பதியே அவ்வூர்
       எசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
       மாசாத்து வாணிகன் மகனை யாகி
       வாழ்தல் வேண்டி  ஊழ்வினை துறப்பச்
      சுழ்கழல் மன்னா நின்னகரப் புகுந்தீங்

     




         



No comments:

Post a Comment

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....