பற்பொடி நாட்டு மருந்து
🍐.விதை நீக்கிய கடுக்காய் 4, தான்றிக்காய் ,4 சுக்கு,2மிளகு,
2,மாசிக்காய் ,2அதிமதுர வேர் ,2 குச்சி ,காசுகட்டி ,20கிராம்
கல்நார் 10கிராம்,ஏலக்காய்10கிராம், மருதம் பட்டை 100
கிராம்,ஆகிய பங்கு அளவில் வருத்துக் கலந்து பொடித்து
சலிக்கவும் .தேவையான அளவு இந்து உப்பு&சூடன்
ஆகியவற்றை கலக்கவும் .எதனால் பல் துலக்கி வர பல்
வலி, பல் அசைவு ஈறு வீக்கம், பற் சொத்தை ,குருதி முதலியன
நீங்கி பற்கள் வலிமை பெறும்
🌼.பொடித்த கற்பூரம் கால் தேக்கரண்டி ,வெப்பந்தூல் அரை
தேக்கரண்டி ,உப்புத் தூள் ,சக்கரை 1 தேக்கரண்டி அளவில்
சேர்த்து நாலு துளி எலுமிச்சை சாறு விட்டு கலந்து வாரம்
இரண்டு முறையாவது இந்த கலவை பற்பொடியில் பல்
தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவதுடன் பற்களின் கரையும்
விலகி பற்கள் பளீர் பளீர் வெண்மையாகும். இந்த பவுடரை
தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம்
விலகும்
🐓. கற்றை காம்பு 10கிராம்,படிகாரம் 10கிராம், சீமை சுண்ணாம்பு
25கிராம், அளவில் சேர்த்து பொடித்து சலித்த பற்பொடியினால்
காலை மாலை பல் தேய்த்து வர ரத்தக் கசிவு &பற்ஈரில் புண்கள்
குணமாகும்
No comments:
Post a Comment