Sunday, 30 September 2018

மருது சகோதரர்கள் வரலாறு

மருது  சகோதரர்கள் 



மறுத்து பாண்டியர் ,மறுத்து சகோதர்கள், மறுதிருவர் என்று அழைக்க படுவர் இருவர்.இருவரும் சகோதர்கள் அண்ணன் பெரியமருது என்றும் ,தம்பி சின்ன மருது என்றும் அன்புடன் அழைக்க பட்டனர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த தியாக சீலர்கள் அவ்வரிசையில் மறக்க முடியாத வரலாற்று நாயகர்களின் இவர்கள் பெயரும் ஆழியாத  இடம் பெறுகிறது

        இவர்கள் பிறந்தது சிவகங்கை மாவட்டம் முக்குளம் என்ற ஊர் இவர்களது காலம் 1748 -1801 இவரது தந்தை மொக்கப்பழனியப்பன் 
சேர்வை தாயார் பெயர் ஆனந்தாயி அம்மையார் என்பதாகும்.

1772இல் ராமநாதபுரம்-சிவகங்கை சீமை போன்ற சிற்றரசுகள் மீது ஆங்கிலேயப் படையெடுப்பு நடைபெற்றது அப்போது சிவகங்கை மன்னரான இருந்தவர் முத்துவடுகர்  என்பவர் இவரது மனைவியார் வேலுனாட்சியார்  இருவருமே வீரமிக்கவர் இவர் களிடம் படை தலைவர்களாக மருது சகோதரர்கள் இருந்தனர் .முத்துவடுகர் வீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்து பொறிட்டாலும் போரில் உயிர் துறந்தார் 


வீரநாட்சியரும் மருது சகோதரர்களும் தப்பி திண்டுக்கல் மலையில் தஞ்சாம் புகுந்து ஹைதர் அலியின் துணையை நாடினர் சிவகங்கை அரசு மறுத்து பாண்டிய ர் கைக்கு மாறியது பெரிய மருது ஒரு வேட்டை பிரியர் அவர் காட்டில் வேட்டையாடும் வயதிலேயே விருப்பம் கொள்ள சின்ன மருது சிவகங்கை ஆட்சியினை சிறப்பாக செய்தனர்.

        1783இல் ஆங்கிலப்படைகள் சிவகங்கை மீது படையெடுத்தது  இதனை மருது சகோதரர்கள் முறியடித்து வென்றனர் இதே போல் மறுமுறை 1789இல் கர்னல் ஸ்டுவர்ட் படையிடுத்த போதும் வீரமுடன் எதிர்த்து வெற்றியை கண்டனர்.

இதன் பிறகு வீரபாண்டிய  கட்டபொம்மன் தூக்கிளிடப்பட்டபின் அவன் தம்பி ஊமைத்துறைக்கு இவர்கள் அடைக்கலம் தந்தனர்.இதனை கண்டு கோபம் கொண்டு மருது சகோதரர்களை தண்டிக்க நடத்த பட்ட 1801 ஆம் ஆண்டு போர் மிக கடுமையாக இருந்தது இது ஏறத்தாழ 150  நாட்கள் இடைவிடாது நடைப்பெற்றது ஆங்கிலேயேற்களே இறுதியாக வெற்றிபெற்றது .கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்கொடுத்ததை போல
நயவஞ்சர்களால் இவர்களும் காட்டி கொடுக்க பட்டனர். 1801 - அக்டோபர் 27இல் மருதுபாண்டியர் தூக்கில் போடப்பட்டு இறந்தனர் வீரத்தால் போரால் அழிக்க முடியாத இவர்கள் உயிர் மருதுபாண்டியர்  காவளர்களில் ஒருவரான கருடத்தனென்பவினின் காயமையில் -பண ஆசையால் இவர்கள் வீழ்ந்தனர் இவனால் சின்ன மருது ஆங்கிலேயர் 
வசமானார் .ஆனபோதும் பெரியமறுதுவை அவர்களால் சிரை செய்ய முடியவில்லை



தெய்வ பக்தி நிறைந்த இவர்கள் காளையர் கோயில் பத்து நாளில் 
பெரியமருது சரணடையவிட்டால் காளையார் கோவில் இடிக்க படும் என்று ஆங்கிலேயர் அறிவித்தனர். கடவுள் பக்தியில் காரணமாக கோவிலை காக்க பெரியமருது தானாகவே வந்து சரணடைந்தார். அந்த பக்தி மரணத்திலும் தெரிந்தது

    இறந்த பின்பு இருவரது உடலையும் திருப்பத்தூரிலும் தலைகளை காளையார் கோவில் முன்பு புதைக்க வேண்டும் என இவர் தந்த வேண்டு கோலே இதற்கு சாட்சி அவ்வாறு செய்யப்பட்டது.

இவர்கள் காளையார் கோவிலை கட்டியது மட்டுமில்லாது மதுரை மீனாட்சியம்மன் கோயில் ,குன்றக்குடி முருகன் கோவில் போன்றவற்றீற்கு திருப்பணிக்கு உதவினார். பல இடங்களில் அன்ன சத்திரம்  அமைத்து .தரும காரியங்களில் ஆர்வ ம் காட்டினார் நீர் பாசக்குளம் -கிணறு என மக்கள் நலன் காத்தனர் .எல்ல வற்றிற்கும் மேலாக இவரது சுதந்திர தாகம் ஆங்கிலேயர் எதிர்ப்பு வீர உணர்வால் இவர்கள் பெயர் வரலாற்றில் அழியாது பதிக்க படுகின்றது எனலாம் 
அஞ்ச நெஞ்சம் என்பதற்கு எந்த அன்பான இரு சகோதரிகளே சான்றாவர்.



     

புலி தேவர் வரலாறு

புலி தேவர் வரலாறு

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் வரிசையில் நாம் அறிய வேண்டிய முதல் பெயர் புலி தேவர் .பெயரிலேயே வீரம் ஒலிக்கும் இவரது பெயர்
பூலித்தேவன் என்பது.இவரது சீற்றம்-வீரம்-கோபம் கருதி புலி தேவன் என்ற மிகா பொறுத்த மாக பெயரில் அழைக்க பட்டிருக்கலாம் .அதோடு 
மக்களுக்கு இன்னல் விளைவித்த புளியை கொன்ற இவரது வீரம் கருதி 
புலித்தேவன் என அழைக்க பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு .மாகத்ம காந்தி போன்றவர்கள் சுதந்திர பயிர் வளர்த்து வெற்றிகணியை கொய்து தந்தன்னர். என்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புலி தேவன் போன்றவர்களால் விதைக்க பற்ற விதையே காரணம் எனலாம். 
இடைவிடாது போர்களை சந்தித்த இவரது வரலாறு ஒரு வீர வரலாறு எனலாம்.

         1714இல் பிறந்த இவரது இயர் பெயர் காத்தப்பத்துறை என்பதாகும் இவரத்து தந்தையர் சித்திர ,புத்தர தேவர் தாயின் பெயர் சிவஞான நாச்சியார் .இவரது பிறந்த நாள் 1.9.1715 என்றும் கூறப்படுகிறது திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார் புறம் என்கிற நெற்கட்டும் செய்வாள் பாளையம் இவரது ஊர் .தனது12ஆம் வயதிலேயே சிலம்பம்,மல்யுத்தம்,குதிரை ஏற்றம்  வாள் யுத்தம் என. பல்வேறுவீர வித்தைகளில் தேர்ச்சிபெற்றார் .

நெற்கட்டும்செய்வாள் ஆட்சி பொறுப்பை புலி தேவன் ஏற்ற காலத்தில்
ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றி நிற்க தொடங்கியது .நவாபு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன் பாட்டிருந்தார்.பாலையங்கார்களிடம்
வரியை வசூல் செய்து அக்கடனை தீர்த்திட நினைத்தான் நவாபு.வரி வசூல் செய்ய நவாபால் இயலாது போயிற்று எனவே அங்கிலேயேற்களே நேரடியாக பாலையங்கார்களிடம் வரி வசூல் செய்யும் உரிமை வழங்கினான் அந்த வகையில் புலி தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேற்ற போது ,வரி கட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை வெளியிட்டார் பூலித்தேவர்


                 இராம்நாதபுரம் ,மதுரை, திருநெல்வேலி,சிவகங்கை,போன்ற பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பு கர்னல் ஹெக்ரன் என்பவருக்கு தரப்பட்டிருந்ததுஅவரின் கட்டுப்பாடு அதிகம் .அவருக்கு அஞ்சி சில பாலயங்கரர்கள் வரி செலுத்தினர் ஆனால் புலித்தேவரோ 
அவைரை சந்திக்கக்கூடாமறுத்தர். எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயருக்கு வரி செலுத்தி ,அடங்கி போக அவரின் சுதந்திர உனக்கு அனுமதிக்க வில்லை புலித்தேவனை பணியவைக்க நினைத்த
கர்னல் ஹெறான் .1755ஆம் ஆண்டு மே 5ம் நாள் ஒரு பெரும் படையுடன் புலி தேவரின் பகுதியான நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டார் .அதோடு கொஞ்சமாவது வரியை செலுத்துமாறு தூது அனுப்பினான் .
ஆனால் கண்டிப்பாக வரி செலுத்த பூலித்தேவர் மறுத்துவிட்டார் கோபம் கொண்ட ஹெரான் அவரது கோட்டையை தாக்கினார் .புலித்தேவரின் 
கோட்டை களிமண் கோட்டை அதனை சேதபாடுத்அ முடியவில்லை. தோல்வியுடன் திரும்பிய கர்னல் இது குறித்து நவாபு இடம் முறையிட்டான் அதோடு புலித்தேவரிடம் வரி வசூல் செய்து தருமாறு நவ்வப்பிடமே கர்னல் கேட்டார் .இது ஒரு வகையில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி என்று கூறலாம்.

புலித்தேவன் தனது நாட்டை மேலும் விரிவு படுத்த எண்ணினார் அதற்காக திருநெல்வேலி பகுதி மீது படையெடுத்தர் அப்போது நெல்லையை ஆண்டவன்  மக் பஸ்கன் அவனிடம் மிக நவீன ஆயுதங்கள் 
இருந்தன எனவே அவரை புலி தேவனால் வெற்றிகொள்ள முடியவில்லை இதனால் தனது படைபலத்தை புலித்தேவன் பெருக்கி கொள்ள விடும்பி திப்பு சூழ்தானிடம் உதவி கோரினார் திரும்பவும் சம்மதித்தர் இதனை கேள்வி பட்ட ஆங்கிலேயருக்கு அச்சம் மிகுந்தது
எப்படியும் புலித்தேவனை வீழ்தவிரும்பினர் பித்தாாலும் சூழ்சியில் வல்லவர்களானக ஆங்கிலேயர்கள் புலித்தேவனுககு ஆதரவகா இருந்த
சிவகங்கை ,இராமானதபுரம் பகுதி மரவர்களை புலித்தேவனுக்கு எதிராக செயல் பட முயர்ச்சித்தனர். மஃபஸ்கான்  போன்றவர்களை புலித்தேவனுக்கு எதிராக துண்டிவிட்டனர் மஃபஸ்கான் படையுடன் சென்று புலித்தேவனுக்கு உரிமையான சிங்கம் பட்டி கோட்டையை கைப்பற்றினான்.



தனக்கு எதிராக செயல்பட ஊத்துமலை ,சேத்தூர் ,படையெடுத்து கைப்பற்றினார் .புலித்தேவன் 1758 இல் திருநெல்வேலியையும் கூட கைப்பற்றினார் .
      புலித்தேவரின் வீரம்,வளர்ச்சி, எதிர்ப்பு,ஆகியவை ஆங்கிலேயரை மிகவும் அதிறவைத்தது இதனை வளரவிடக்கூடாது என்பதில் தீவிரம்
காட்டினர் இதற்காக புலித்தேவனின் எதிரியான யூசுகான் என்பவரை
பயன்படுத்திக்கொண்டனர் தஞ்சாவூர்,புதுக்கோட்டை,அரசர்களின்
படையையும் ஆங்கிலேயர் அறியுரைப்படி யூசுப்கானுக்கு உதவி செய்தது
அதோடு திருவாங்கூர், மன்னன் எதிர்ப்பும் புலித்தேவனுக்கு சேர்ந்தது
எல்லோரது எதிர்ப்பும் இருந்தும் நெற்கட்டும் செவ்வலை வெல்ல இயலவில்லை அதோடு வாசுதேவநல்லூர் முற்றுகையிலும் புலித்தேவன் வெற்றிபெற்றார் .


  இருப்பினும் யூசுகானின் தோல்வியால் வளர்த்த புகையால் அவன் எப்படியும் புலித்தேவனை வீழ்த்த முடிவு செய்தான் .தன் படை படை பலத்தை பெருக்கினான் 1760 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் நாள்
யூசுப்கான் நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டனர்.1761ஆம் ஆண்டு
மார்ச்21முதல் மே 16 வரை இந்த மாபெரும் போர் நீடித்ததுசேதம் இருவருக்கும் அதிகம் இறுதியில் புலித்தேவரின் நெற்கட்டும் செவ்வல்
வாசுதேவநல்லூர் ,புனையூர் போன்றவை யூசிப்கானால் கைப்பற்றப்பட்டது அதோடு அவை இடித்து தரைமட்டம்ஆகியது.

     இதற்கு மேல் அதோகம் புலித்தேவனை பற்றி செய்திகள் சரிவர கிடைக்கவில்லை இந்த மாபெரும் வீரனின் இருதிக்கால வரலாறு இன்று
வரை மர்மமாகவே உள்ளது .இவர் அந்நியரிடம் அக்கப்படக்கூடாதஎன்று
உணர்வில் தற்கொலை செய்து கொண்டதாகவும் சவகரன் கோயிலில்
இறைவனோடு கலந்துவிட்டார் என்றும் கூற படுகிறது

    புலிதேவரின் தன் நண்பர்களிடம் தப்பி சென்று மேற்கு தொடர்ச்சி மலையில் ஒளிந்து ஒழிந்துகொண்டதாகவும்கூறப்படுகிறது.அவரை வெள்ளையர்கள் தேடி கைது செய்தனர். அதோடு அவரை பாலயங்கோட்டைக்கு அழைத்து சென்றனர் வழியில் சங்கரன் கோயில் இறைவனை வழிபட விரும்புவதாக வெள்ளையர்களிடம் அனுமதி பெற்றுச்சென்றார். அதன் பின்னர் அவரை யாருமே பார்க்கவில்லை ஒரு
சமயம் ஆங்கிலேயர் அவரை கொன்று இருக்கலாம் .

   எப்படியோ  புலித்தேவன் என்ற பெயர் ஆரம்ப கால எதிர்ப்புக்கு முதலிடம் வகிப்பதை யாருமே மறுக்க முடியாது மறக்க முடியாது.


நாம் விரும்பும் தலைவர் பெரியார்

ஈ.வே.ரா.பெரியார்


முன்னுரை:

வைக்கம் வீரர் என்று போற்றப்படும் தீரர் . வெந்தாடி வீரர் என்று அழைக்கப்படும் தலைவர் "தந்தை பெரியார் என ஏற்றப்படும் தியாகசீலர்
ஈரோட்டு சிங்கம் கருஞ்சட்டை வீரர் என்று பல்வேறு அடைமொழியால் 
அழைக்கப்படும் தமிழ் நாட்டு சாக்ரடீஸ் பகுதரிவு பகலவன் இவர் .ஜஸ்டிஸ் பிசர்ட்டி பிறகு திராவிட கழகம்  என்று இவர் அரசியல் வாழ்க்கை  எருந்தாலுமாரம்பத்தில் இவர் ஒரு காங்கிரஸ் காரர் .கதர்சட்டை வீரர் ,கள்ளுக்கடை மறியலில் ஈறுபட்டவர் .தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு ஆலய பிரதேசம் நடத்தியவர்.மிகவும் பிற்படுத்த பட்ட மக்களுக்கு போராடியவர் மூட நம்பிக்கைகளை சாட்டியவர்

பிறப்பும் இளமையும்:

1879 ம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாளில் கோவை மாவட்டம் ஈரோட்டில் பிறந்தார் இவர் .இவர் பெயர் ராமசாமி பள்ளியில் அதிக அம் பாதிக்காது போயினும் இவர் மேதை நிரைய அனுபவமிக்கவர்  .

            வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்தவர் . சுதந்திரம்-பகுத்தறிவு - மனிதர்கள் சமம் -ஆண்டான் அடிமையில்லை . சாதியில் தாழ்வு உயர்வு
இல்லை என்பதில் மிக்க உறுதியாக நின்றவர் .

கட்சிகள்:

1919இல் அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில்,தந்தை பெரியார் காந்தியை சந்தித்தார் .இந்த சந்திப்பு இவருக்கு காங்கிரஸ் மீது பற்று. கொள்ள
காரணமானது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிந்தார் .1923இல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரானார்.

       காந்திஜி 1927இல் பெங்களூரில் பெரியாரை  விரும்பி அழைத்து நீண்ட நேரம் சந்தித்து பேசினார் .காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார் .தமது வீட்டில் இருந்த அந்நிய துணைகளி தீக்கு இறையாகினார் கதர் துணி ஆதரவு பிரச்சாரம் செய்தார். கதர் துணிகளை மூட்டையாக கட்டி தெரு தெருவாக விற்ற தீரர்
இவர்.

சமுதாய ஆரவம்:

காந்திஜியின் மதுவிலக்கு கொள்கையிலும் இவர் ஆர்வம் காட்டினார் .
கள்ளுகடைகளுக்கு முன் சென்று பல இடங்களில் மறியலில் ஈடுபட்டார் .
தனது தோட்டத்தில் கள் இறக்கிட கொடுத்த 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். என்றால் இவர் தீவிரத்தை நாம் அறியலாம் .

         தீண்டாமை எனும் கொடுமைக்கு மிகவும் எதிராக போர் இட்டார் சேரணமால் தேவியை காங்கிரஸ் நிதி உத யுடன் நடை பெற்ற குருகுலத்தில் தாழ்த்த பட்ட மாணவருக்கு தனியாக உணவு வழங்குவதை தடுத்தார் .அது இயலாது போக ,குருகுலமே மூடப்பட்டது .
கேரளத்தில் உள்ள வைக்கம் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழக்க பட்ட கொடுமையை எதிர்த்து போராடி வெற்றிகண்டார் .இதனால் தான்
இவர் வைக்கம் வீரர் என்று போற்ற பட்டார் .



13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் தரப்பட்டது.
பெரியார் ஈரோடு நகராட்சி தலைவராகவும் பல நற்பணிகள் ஆற்றினார்
காந்திஜி ஒத்துழையாமை திட்ட ம் அறிவித்த போது இப்பதவியை உதவியதற்கு ஒத்துழைத்தார் .ஏரத்தாழ்தாம் வகித்த 28 பதவிகளை பெரியார் துறந்தார் .

    ரஷியா ,ஜெர்மனி,எகிப்பு, துருக்கி, பிரான்ஸ்,இங்கிலாந்து ,ஸ்பெயின்,இலங்கை, மலேசிய போன்ற பல நாடுகளுக்கு சென்று வந்தவர் இவர்.
      மனத்தில் பட்டத்தை துணிவோடு சொல்லும் ஆற்றல் மிக்க தீரர் .கடவுள் உருவ வழிபட்டையம், புராணம்,இதிகாசம்,அதில் வரும் நம்ப முடியாத கருத்துக்களை சாட்டினார். நீதிகட்சியில் இருந்தார்,பிறகு இவரே திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி ..தேர்தலில் நிற்காது ,பதவியை
நாடாது சமூக சீர்திருத்தம் ஒரேலேயே கவனம் செலுத்தினார் பல நூல்களை எழுதினார் .விடுதலை என்ற நாலேட்டை தொடர்ந்து நடத்தி வந்தார்.
முடிவுரை:

தன்மான உணர்வு ,பகுதரிவு என்றால் அது பெறார் என போற்றும் தனிதனமாய் பெற்றவர் அவர் இன்றைய திராவிட கட்சிகளுக்கு எல்லாம்
தாய் ஸ்தாபனம் ,தி.க.தான் இறுதிவரை வெந்தாடியையும் கருச்சடையும்
அணிந்து வாழ்ந்தார் .நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து தான் தேடிய செல்வத்தை பல கல்வி நிறுவனங்களுக்கு செலவிட்டார் பாலி டெக்னீக்
ஆசிரியர் பயிர்ச்சி என பல்வேறு நிறுவனம் இவர் நிதியால் இன்றும் செயல்படுகிறது



Saturday, 29 September 2018

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

தேசிய ஒருமைப்பாடு


முன்னுரை:

"முப்பது கோடி முகமுடையால் -உயிர்
மொய்ப்புற ஒன்றுடையால் " என்ற வரிகள் பாரதியின் தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது .பல்வேறு மதம்,மொழி, இனம், பண்பாட்டு போன்றவற்றை நாம் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும்
ஒரே தாயின் பிள்ளைகள் என்று உணர்த்துவதே தேசிய ஒருமைப்பாடாகும்.நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒரு பாட்டு இருந்தால் நம்மைப்போல் வலிமையுள்ளவர் இவ்வுலகில் யாருமிலர் .இத்தகைய தேசிய ஒருமைப்பாட்டை பற்றி இக்கட்டுரையில்
காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை:

பண்டையகாலத்தில் வேற்றுமைகள் பல இருப்பினும் ஒருமைப்பாட்டை
காணப் பேரரசர்களும் ,சிற்றர்களும் முயன்று வந்துள்ளனர் .மாமன்னர்
அசோகர் நாட்டினிடையே பிணைப்பை உருவாக்கப் பாடுபட்டார் .ஆங்கிலேயர் நம் நாட்டை ஆள முற்பட்ட பின்பு நமக்குள் நாம் முற்பட்டோம் பொருளத்திலும் ,கல்வியிலும்  பிணைப்பு உண்டாயிற்று .
நம் இந்திய என்ற உணர்வால் ஆங்கிலேயரை நம் நாட்டை விட்டு விரட்டி
விடுதலை போரில் வெற்றி கண்டோம் .இதற்கு காரணம் நமக்குள்ளே
வேற்றுமைகளை மறந்து நாம் ஒன்றுபட்டது தான் .

பாரதியின் ஒருமைப்பாட்டுணர்வு:

பாரதாயார் தேசிய கவியாக ,மக்கள் கவியாக நம் முன் உலாவருக்கிறார்

"வங்கத்தின் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்" என்று

"கங்கை நதிப்புறத்து கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறி கொள்வோம்,

என்றும் பாரதி கனவு ஒருமைப்பாட்டின் உச்சக்கட்ட என்னமாகும்

அன்றே பாரதி கண்ட கனவை நினவாக்கி நதிகளை இணைத்து நாடு செழிக்க ச் செய்திருந்தால் நாட்டின் எல்லா பகுதிகலும் செழித்து வளர்ந்திருக்கும்

வேண்டத்தக்காதவை:

சாதி, மதம், மொழி, ஆகியவற்றால் இன்றைய இந்தியர்கள் வெறுபட்டிருக்கின்றனர் ,அரசியல் தலைவர்களும் சுயநலபோக்கால் மக்கள் பிளவு பட்டு நிற்கும் நிலை நாட்டின் நிலவுகிறது.தேர்தல் காலத்தில் சாதி, மத, இன, வேண்டத்தக்காதவை என நாம் ஒதுக்கி தள்ளிவிட்டு நமக்குள் நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்



இன்றைய பாரதம்:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களும் சுயநல போக்கை மறந்து செயல்பட்டால் மட்டுமே ஒருமைப்பாட்டை உருவாக்க இயலும். "தண்ணீரை பங்கிட்டுவதில் ,மின்சாரத்தை பங்கிட்டுவதில் மாநிலங்அழுகிடையே வேறுபாடு நிலவுவது இன்றைய பாரதத்தின் வளர்ச்சிக்கு வழி கோலாது.ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களை
மதித்து நட்புறவை வளர்த்து கொண்டால் மட்டுமே வளமான பாரதத்தை
நம்மால் உருவாக்க இயலும் .

மாணவரிடையே ஒருமைப்பாடு:

இன்றைய மக்களிடைமத்தியில் ஒருமைப்பாட்டு நிலவுவதில் குறைப்பது இறந்தாலும் பள்ளி, கலல்லுரிகளில் பயிலும் மாணவர்களுகிடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவது மிக மிக வேண்டற்பாலதாக்கும் ,ஒரே
மாதிரிரியான கல்வித் திட்டத்தின் மூலமாக ஒருமைப்பாட்டை ஏற்படுத்த
முடியும் .எல்லா மாநிலத்தவர்களும் ஒரே விதமான வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க செய்ய வேண்டும் .மாநிலங்கலுகிடையே மக்கள்
ஒன்று பட்டு வாழி பல்வேறு வழிவகைகளை  ஆராய்ந்து செயல்படுத்தினால் ஒருமைப்பாட்டு தானாக வளரும் என்பதில் ஐயமில்லை.

முடிவுரை:

உலக அரங்கில் நாம் வல்லரசாய் உருவாக்க நம்முடைய த்தேவை"தேசிய
ஒருமைப்பாடு "பாரத தாயின் புதல்வர்கள் நாம் என்ற உணர்வை நம்
ரத்த நாலால்களிலும் ஓடவேண்டும் .நம் திறமைகளை எல்லாம் நம்
நாட்டின் வளமைக்கே வைரக்கியத்தோடு நாம் உழைத்தால் வளமை பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.ஒன்றுபடுவோம் ,உயர்ந்தோங்கி
நிற்போம். வாழ்க பாரதம்!!!

Friday, 28 September 2018

தொல்லியல் ஆய்வுகள்

தொல்லியல் ஆய்வுகள்


முன்னுரை:

தொன்மை காலத்தைப் பற்றி ஆய்வு  செய்தலையே தொல்லியல் அல்லது தோன்பொருளியால் என்கிறோம்.தொல்லியல் ஆய்வு இன்றேல்
மனிதன் கடந்து வந்த பாதையையும் அவன் வரலாற்றையும் அறிய இயலாது போயிருக்கும்.

தொல்லியல்:

மனிதன் தோன்றி நாடாடியாக இருந்த காலத்திலிருந்து ,வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே தொன்மை காலம் என்கிறோம்.தொன்மை காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை 
தொழில்கள் ,வணிகம், வேளாண்மை, அரசியல், நுண்கலை பற்றி கல்வெட்டுகள், கட்டிடங்கள், காசுகள், செப்பேடுகள் முதலியானவற்றை 
அடிப்படையில் ஆய்ந்தரிதல் தொல்லியளில் முதன்மையான நோக்கம் ,தொல்லியலை ஆங்கிலத்தில் "ஆர்க்கியாலஜி" என்கிறோம்


தொன்மைக்கால நிகழ்வுகளை அறிதல்:

அவ்வப்போது திட்டமிட்டுச் செயல்படும் ஆய்வுகளின் போதே ,தற்செயலாக கிடைக்கு. தடயங்கள் ,எச்சன்களின் உதவியுடன்னே
தொன்மைக்கால நிகழ்வுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள்.எடுத்துக்காட்டாக ,மணிமேகலை ,சிலப்பதிகாரம், 
முதலிய இலக்கியங்களில் இடம் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் என்கிற துறைமுகம் (சோழர்களின் கடற்கரை நகரம்)இருந்த்ததற்கான
தடயங்கள் கிடைக்கப் பெறாமல் இருந்தன .இந்திய தொல்லியல் 
துறையினர் 1963ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் உள்ள கீழார்வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அழாய்வின் போது கி.மு.மூன்றாம்
நூற்றாண்டைச் சார்ந்த கட்டட் இடிப்படுகள் காணப்பட்டன.
இந்த ஆய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட படகுத்துறை ,அரைவட்ட வடிவ 
நீர்த்தேக்கம் ,பூத்தவிஹாரம் (புத்த பிக்குகள் தங்குமிடம்)வெண்கல த்தாலான புத்த பாதம் முதலிய எச்சங்கள் கிடைத்தன . இவை பண்டைய 
காவிரிப்பூம்பட்டின மக்கள் பயன்படுத்திய பொருள்கள் என்பது காவிரி 
பூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்தது என்பதும் வலுவான சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது .



தொல்லியல் துறை ஆய்வின் பயன்பாடு:

காவேரிப்பூம்பட்டின அகழ்வாய்வில் கிடைத்த புத்தர்சிலை  ,தூண் போன்றவை கொண்டு ,அங்கு வாழ்ந்த மக்களின் சிலர்ப்புத்த  சமயத்தை
பின்பற்றியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம் .

படகுத்துறை கட்டப்பட்டுள்ளதை நோக்கும் போது அவ்வூர் மக்கள் கடல் வாணிகம் மேற்கொண்டனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

அறிவியல் முன்நேற்றங்களால்  ,தற்காலத்தில் தொல்லியல் ஆய்வுகளைபி பல்வேறு புதிய தொழில் நுடப்பங்களில் உதவியுடன்
செய்யும் போது ,மிகத் துல்லியமான முடிவுகளை பெற இயல்கிறது.








Wednesday, 19 September 2018

கருத்தடை நாட்டு மருத்துவம்

கருத்தடை வழிமுறைகள்

சகல பணிகளுக்கும் மருந்துகளை கூறிய சித்தர்கள் பாவச் செயல் எனக் கருதியோ மலடாக்கும் மருந்துகளை மட்டும் அறிந்திருந்தும் அதிகம் கூறவில்லை.தற்சமயம் நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கத்தை குறைப்பதற்கு அரசினரே ஆவண செய்து வருவதால் நாமும் அதைப் பற்றி சிறிது கூறியுள்ளோம் . இவற்றுள் சில நிரந்தரமாகவும் ,சில அவ்வபோதும் .கருதடையில் உண்டு 

🌲.பப்பாளிப்பழம் ,அன்னச்சிபழம்,எள்ளு , வெள்ளம் இவை சமன்கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு வலி,மாதவிலக்கு சமயம் உண்டு வர கருதரிக்காது.
🌲.கடம்பப் பழச்சாறும் ,தேனும் கூட்டி பார்லி கஞ்சிவுடன் மாதவிடாய் போது உட்கொள்ளவும்.
🌲.பப்பாளிக்காயும், பெருங்காயமும் கூட்டி குடிநீரை 100கி அளவில் 5ம் நாளில் இருக்குது மூன்று நாட்கள் மூன்று வேளையும் வர கரு உண்டாகாது.
🌲.செம்பருத்தி ப்லாவை அரைத்து 50 கிராம் எடையில் சம அளவு பழைய
வெல்லம் கூட்டி 6 மாதமான கருங்கருவை அன்னக்காடி நீரில் கரைத்து பெண்கள் வீட்டிற்கு விலக்கான 4 நாட்கள் முடிந்த உடன் 3தினமும் காலை, மாலை, உட்கொள்ள கருதரிகாது


செண்பக இலையை அரைத்து இரவில் நீரில் ஊறவிட்டு காலையில் தெளிய வடித்து மாதவிடாயின் போது அருந்த ஒரு வருடம் கரு உண்டாகாது.
🌲.மாதவிலக்கு வரும் நாள் என்ற கவலையுடன் ,சுபகாரியங்கள் அல்லது
வெளியூர் செல்ல வேண்டிய ஆர்வம் இருக்கும் பெண்கள் ,இதற்கு 3 நாட்கள் முன்பே தினசரி இரவிஜி பாலுடன் பொட்டுக்கடலை தூள் செய்து ஒரு கைப்பிடி
அளவு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தள்ளி போகும் .கண்டா மாத்திரைகளை
சாப்பிடுவதை விட இது மிகவும் ஆரோக்கியமான எளிய முறையாகும்.
🌲.செம்பருத்தி பூவை நீர் விட்டு அரைத்து கோதுமை கஞ்சியுடன் சூதக சமையம்
2,3 நாட்கள் சாப்பிட்டு வர கரு உண்டாகாது.
🌲.அதலை கிழங்கு, மஞ்சள்,கருஞ்சீரகம்,கருப்பட்டி இவைகளை சமன் கூட்டி அரைத்து எழுமிச்சையளவு தினசரி காலை மாலை இரண்டு வேலையாக  மாதவிடாய் ஆன 5ம் நாளிலிருந்து 3 நாட்கள் உன்னைக் கருதரிகாது


Tuesday, 18 September 2018

ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில வழிமுறைகள்

ஆரோக்கியமாக வாழ்வதற்கான  முறைகள்



☺.காலையில் 2 கி.மீ நடப்பது நல்லது
☺.உடற்பயிற்சியும் யோகாசனமும் நாள் தோறும் நல்லது
☺.காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்
☺.பகலில் தூக்கம் தவிர்த்தல் நன்று
☺.தினமும் 8 மணி நேரத்திற்கு அதிகமாக தூக்கம் வேண்டாம்


☺.கீரையும் ,தயிரும் இரவினில் வேண்டாம்
☺.உப்பு,புளி, காரம் குறைத்து உன்னாலே உகந்தது
☺.கசப்பு உணவில் கட்டாயம் சேர்த்து  உண்ண வேண்டும்
☺.மரங்களின் அடியினில் உறங்க வேண்டாம்
☺.வெளிச்சமும், காற்றும் வீட்டினுள் வர வேண்டாம்
☺.குழந்தைக்கு தாய் பால் கொடுப்பது சிறந்தது
☺.நாய், பூனைவுடன் கொஞ்சிவது கேடு
☺.மலர்களை இரவில் மறந்தும் முகரக் கூடாது
☺.வடதிசை தலைவைத்து  தூக்கம்  கொள்ள கூடாது.
☺.எண்ணெய் குளியல் எழில் சேர்த்திடும்
☺.கொழுப்பு உணவுகள் குறைத்தல் நல்லது
☺.கருணை தவிர மற்ற கிழங்குகளை உண்ண வேண்டாம்
☺.உண்டவுடனே உறக்கம் கொள்ள வேண்டாம்
☺.உள்ளாடைகள் மிகவும் இறுக்கமாக அணியக்கூடாது
☺.உயரத்திற்க்கு ஏற்ற  உடல் எடை யை இருக்க வேண்டும்

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....