மருது சகோதரர்கள்
மறுத்து பாண்டியர் ,மறுத்து சகோதர்கள், மறுதிருவர் என்று அழைக்க படுவர் இருவர்.இருவரும் சகோதர்கள் அண்ணன் பெரியமருது என்றும் ,தம்பி சின்ன மருது என்றும் அன்புடன் அழைக்க பட்டனர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த தியாக சீலர்கள் அவ்வரிசையில் மறக்க முடியாத வரலாற்று நாயகர்களின் இவர்கள் பெயரும் ஆழியாத இடம் பெறுகிறது
இவர்கள் பிறந்தது சிவகங்கை மாவட்டம் முக்குளம் என்ற ஊர் இவர்களது காலம் 1748 -1801 இவரது தந்தை மொக்கப்பழனியப்பன்
சேர்வை தாயார் பெயர் ஆனந்தாயி அம்மையார் என்பதாகும்.
1772இல் ராமநாதபுரம்-சிவகங்கை சீமை போன்ற சிற்றரசுகள் மீது ஆங்கிலேயப் படையெடுப்பு நடைபெற்றது அப்போது சிவகங்கை மன்னரான இருந்தவர் முத்துவடுகர் என்பவர் இவரது மனைவியார் வேலுனாட்சியார் இருவருமே வீரமிக்கவர் இவர் களிடம் படை தலைவர்களாக மருது சகோதரர்கள் இருந்தனர் .முத்துவடுகர் வீரமுடன் ஆங்கிலேயரை எதிர்த்து பொறிட்டாலும் போரில் உயிர் துறந்தார்
வீரநாட்சியரும் மருது சகோதரர்களும் தப்பி திண்டுக்கல் மலையில் தஞ்சாம் புகுந்து ஹைதர் அலியின் துணையை நாடினர் சிவகங்கை அரசு மறுத்து பாண்டிய ர் கைக்கு மாறியது பெரிய மருது ஒரு வேட்டை பிரியர் அவர் காட்டில் வேட்டையாடும் வயதிலேயே விருப்பம் கொள்ள சின்ன மருது சிவகங்கை ஆட்சியினை சிறப்பாக செய்தனர்.
1783இல் ஆங்கிலப்படைகள் சிவகங்கை மீது படையெடுத்தது இதனை மருது சகோதரர்கள் முறியடித்து வென்றனர் இதே போல் மறுமுறை 1789இல் கர்னல் ஸ்டுவர்ட் படையிடுத்த போதும் வீரமுடன் எதிர்த்து வெற்றியை கண்டனர்.
இதன் பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிளிடப்பட்டபின் அவன் தம்பி ஊமைத்துறைக்கு இவர்கள் அடைக்கலம் தந்தனர்.இதனை கண்டு கோபம் கொண்டு மருது சகோதரர்களை தண்டிக்க நடத்த பட்ட 1801 ஆம் ஆண்டு போர் மிக கடுமையாக இருந்தது இது ஏறத்தாழ 150 நாட்கள் இடைவிடாது நடைப்பெற்றது ஆங்கிலேயேற்களே இறுதியாக வெற்றிபெற்றது .கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்கொடுத்ததை போல
நயவஞ்சர்களால் இவர்களும் காட்டி கொடுக்க பட்டனர். 1801 - அக்டோபர் 27இல் மருதுபாண்டியர் தூக்கில் போடப்பட்டு இறந்தனர் வீரத்தால் போரால் அழிக்க முடியாத இவர்கள் உயிர் மருதுபாண்டியர் காவளர்களில் ஒருவரான கருடத்தனென்பவினின் காயமையில் -பண ஆசையால் இவர்கள் வீழ்ந்தனர் இவனால் சின்ன மருது ஆங்கிலேயர்
வசமானார் .ஆனபோதும் பெரியமறுதுவை அவர்களால் சிரை செய்ய முடியவில்லை
தெய்வ பக்தி நிறைந்த இவர்கள் காளையர் கோயில் பத்து நாளில்
பெரியமருது சரணடையவிட்டால் காளையார் கோவில் இடிக்க படும் என்று ஆங்கிலேயர் அறிவித்தனர். கடவுள் பக்தியில் காரணமாக கோவிலை காக்க பெரியமருது தானாகவே வந்து சரணடைந்தார். அந்த பக்தி மரணத்திலும் தெரிந்தது
இறந்த பின்பு இருவரது உடலையும் திருப்பத்தூரிலும் தலைகளை காளையார் கோவில் முன்பு புதைக்க வேண்டும் என இவர் தந்த வேண்டு கோலே இதற்கு சாட்சி அவ்வாறு செய்யப்பட்டது.
இவர்கள் காளையார் கோவிலை கட்டியது மட்டுமில்லாது மதுரை மீனாட்சியம்மன் கோயில் ,குன்றக்குடி முருகன் கோவில் போன்றவற்றீற்கு திருப்பணிக்கு உதவினார். பல இடங்களில் அன்ன சத்திரம் அமைத்து .தரும காரியங்களில் ஆர்வ ம் காட்டினார் நீர் பாசக்குளம் -கிணறு என மக்கள் நலன் காத்தனர் .எல்ல வற்றிற்கும் மேலாக இவரது சுதந்திர தாகம் ஆங்கிலேயர் எதிர்ப்பு வீர உணர்வால் இவர்கள் பெயர் வரலாற்றில் அழியாது பதிக்க படுகின்றது எனலாம்
அஞ்ச நெஞ்சம் என்பதற்கு எந்த அன்பான இரு சகோதரிகளே சான்றாவர்.