Friday, 27 July 2018

நினைவுகள் கவிதை

நினைவுகள்





உன்னில் பார்த்த அந்த ஒன்றை ஊருக்கு சொல்ல
        விரும்பிக்கிறேன்.எனக்குள் தோன்றும் அந்த
ஒன்றை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன்
        உறவாய் மாரி உயிராய் தோன்றும்  உன்
உள்ளத்தை நான் விரும்புகிறேன்  ஒரு முறை
      நீ பார்பாய் என நினைத்து நான் எங்குகிறேன்
என்றாவது  உன்  கை சேர்வேன்  என நிம்மதியில்
       நான் வாழுகிறேன்   உன் தோல்மீது  நான்
சாயிந்திடவே பல ஜென்மங்கள்   உன்னை
     தொடருக்கிறேன்  உன் அரவணைப்பில் நான்
 தூங்கிடவே  தினம்தூக்கம் இன்றி இருக்கின்றேன்
 பூவே நீ இல்லை என்றால் உன்மடியிலே  நான்இறக்கின்றேன்



தூது வளை துவையல்

தூதுவளைத் துவையல்


தேவையான பொருட்கள்


தூதுவளை கீரை- ஒரு கப்
 புளி                         -சிறு எலுமிச்சை
மிளகாய் வற்றல்-3
இஞ்சி.                   -சிறிதளவு
பூண்டு .                -சிறிதளவு
எண்ணெய்.       -தேவையான அளவு
உப்பு.                    - தேவையான அளவு



செய்முறை: 

முதலில்  கீரையை முள் வெட்டி  இரண்டாக வெட்டி கொள்ளவும்
பின், ஒரு வானலில்  எண்ணெய் சேர்த்து கீரை மிளகாய்  பூண்டு 
இஞ்சி சேர்த்து நிறம் மரா வண்ணம் வதக்கி அரைத்து கொள்ளவும்
 பின்பு  எண்ணெய் கடுகு  உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்த கலவையில் சேர்த்து பரிமாறவும்

           

Thursday, 26 July 2018

ஆவாரம் பூ பொறியல்

ஆவாரம்பூ பொறியல்


தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ- தேவையான அளவு
வெங்காயம்-ஓன்று
மிளகாய்த் தூள்- ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு- ஓர் தேக்கரண்டி
எண்ணெய்  - தேவையான அளவு
கடுகு            - அரை தேக்கரண்டி
உப்பு . -  தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி கடுகு
கடலை பருப்பு வெங்காயம் , சேர்த்து நன்கு 
வதக்கி கொள்ளவும். பின்பு பூவை சேர்த்து 
வதக்கி மிளகாய் தூள் உப்பு சேர்த்து தண்ணீர்
விட்டு வேகா விடவும் பின்பு இறக்கவும்

Wednesday, 25 July 2018

பபப்பாளிக்காய் பொறியல்

பப்பாளிக்காய் பொறியல்


தேவையான பொருட்கள்:


பப்பாளிக்காய்- ஓன்று
தேங்காய் துருவல் -அரை தேங்காய்
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- நான்கு
கடுகு.        - தேவையான அளவு
உப்பு-        தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம்-ஓன்று பொடியாக நருக்கியது


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பப்பாளி காய் எடுத்து தோல் நீக்கி  சீவலில் 
சீவிவைத்து   கொள்ளவும்
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, மிளகாய்
சேர்த்து கொள்ளவும்
பின் வெங்காயம், கடலை பருப்பு ,சேர்த்து வதக்கி சீவி வைத்த பப்பாளி 
சேர்த்து வதகியா பிறகு காய் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியாவுடன்  துருவி வைத்த தேங்காவை சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும் சுவையான பொறியல் தயார்

மொடகட்டான் தோசை

மொடகட்டான் தோசை


தேவையான பொருட்கள்:


மொடகட்டான் கீரை-தேவையான அளவு
தோசை மாவு (அல்லது)
இட்லி அரிசி-ஒரு அழாக்கு
பச்சரிசி.       ஒரு அழாக்கு
உளுந்து.     - முக்கால் அழாக்கு
மிளகு- அரை தேக்கரண்டி
சீரகம்.     -அரை தேக்கரண்டி
உப்பு    _தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு




செய்முறை:

இட்லி அரிசி ,பச்சரிசி, உளுந்து, ஆகியவை சேர்த்து ஊறவைத்து 
கொள்ளவும் பின்பு அதை அரைக்கவும் 
பின்பு அதில் கீரை சேர்ந்து  அரைக்கவும் 
மிளகு ,சீரகம், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
அதை புளிக்க விட்டு தோசையாக சுட்டு எடுத்து  பரிமாறவும் சுவையான 
தோசை தயார்

அரிசி மாவு அடை

அரிசி மாவு அடை



தேவையான  பொருட்கள்


புழுங்கலரிசி - ஒரு அழாக்கு
பச்சரிசி.         -ஒரு  அழாக்கு
உளுந்து.        -ஐம்பது  கிராம்
வெந்தயம்.     -ஒரு தேக்கரண்டி
வெங்காயம்-   இரண்டு
கடலை பருப்பு- ஐம்பது கிராம்
எண்ணெய்-   தேவையான  அளவு
உப்பு             -   தேவையான  அளவு
கடுகு.            -தேவையான அளவு
பெரும் சீரகம் -தேவையான அளவு
பச்சை மிளகாய்-நான்கு

செய்முறை:

ஒரு  பாத்திரத்தில்  தேவையான  அரிசி அத்தனையும்  எடுத்து கொள்ளவும்.சிறிது அளவு வெந்தயம் உளுந்து சேர்த்து ஊறவைத்து
கொள்ளவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு  அரைத்து கொள்ளவும்
ஒரு வானலில்  எண்ணெய் ஊற்றி  கடுகு  பெருசீரகம்  வெங்காயம்,
கடலை பருப்பு ,சேர்த்து வதக்கியபின் பச்சைமிளகாய் அல்லது(மிளகாய் வற்றல்) சேர்த்து வதக்கிய பிறகு அறைத்து வைத்த மாவில் ஊற்றி
நன்கு கிளறி விட்டு பின் தோசை கல்லில்  சுட்டு  எடுத்தால்  சுவையான
அடை தயார்

Monday, 23 July 2018

பிரிவு என்னை பிரிக்க வில்லை கவிதை

பிரிவு என்னை பிரிக்கவில்லை



பிரித்தோம் என்று நினைத்திருந்தேன்
        பிரிவுக்கே தெரியவில்லை 
பிரிந்தது உடல்  மட்டும்  தானே தவிர
         உள்ளம்  இல்லை என்று


பிரிவு என்று சொல்லை நீக்க அடையலாம் 
       ஒன்று  செய்து  வைத்தேன்
இறக்கும் நிலை போகும் வரை  அவன் 
        மனத்திலிருக்க  நினைத்திருந்தேன்
மனம் மகிழ்ந்து உன் மடியில்  வாழ்ந்திருக்க
        நினைத்திருந்தேன் இத்தனையும்
நான் நினைக்க  நீ  மறந்து போனயட

காலத்தினால் நம் வாழ்வு  அர்த்தம் இன்றி 
       போனதட இனி வாழ வேண்டாம்
என்று  நினைத்து  மனம்  துடிக்குதட  மடி
        மேலே  நான் சுமந்த மலர்கள் கண்ணில் 
தெரியுதட என்ன செய்வேன் என் வாழ்வே 
              என்று தினம் புலம்புதட நீ
நினைவிருக்க என் வாழ்வை  நான் தொடர 
        நினைத்தேன்னடா 

மறு வாழ்வு நீ கொடுத்த பூவினிலே தொடருதட
           மாதம்  பல  கடந்த  பிறகும்   மலரும் 
நினைவு   இனிக்குதட  மாசற்ற நம்
        காதல்  பிறிவினிலே தெரியுதட
  

பிரித்துவைத்த கடவுளுக்கும் பிரிவு
       தனய் புரிந்ததட கண் திறந்து
பார்க்கையிலே  மெய் மறந்து போனேனட 
     என்ன  வென்று  கேட்பத்துக்குள்
என்னை அனைத்து கொண்டாயட
   

மலையிலிருந்து நான் விழுந்தும் மறு
    பிறவி  எடுத்தெனடி அடுத்த கணம்
நான் மகிழ்ந்து  உன்னை தேடி வந்தெனடி
     மலரும் நம் காதல்  இன்று நம்மை
காத்ததடி பிரிவு நம்மை பிரிக்க வில்லை
      என்று  இன்று புரிந்ததடி

Saturday, 21 July 2018

கச கச துவையல்

கச கச துவையல் 


தேவையான பொருட்கள்,

கச கச-ஒரு கப்
மிளகு-ஒரு தேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்டி
நாட்டு ரோஜா- ஓன்று
புளி                 -ஒரு எலுமிச்சை
உப்பு                -தேவையான அளவு
கடுகு .                "
கருவேப்பிலை"
உளுத்தம் பருப்பு"


செய்முறை

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி  சீரகம்  ,மிளகு , ரோஜா , புலி, 
உப்பு  சேர்த்து  நிறம் மாறவண்ணம் வதக்கி  பின் அரைத்து கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை  உளுந்தம் பருப்பு  சேர்த்து  பொறியவிட்டு தலித்தபிறகு பரிமாறலாம்

இயற்க்கை கவிதை

இயற்கை


மண் வளமும் நீர் வளமும் பூமியிலே நிறைந்திருக்க,
        பசுமை தனில் மண் மேலே போர்வை போல போற்றிருக்க.
காற்று தனில் வீசையிலே மரங்களெல்லாம் சிரித்துருக்க,
       தரை மீது கோபுரமாய் மலைகலெல்லாம் உயந்திருக்க.
அருவியிலே நீர் நிறைய பெருக்கெடுத்து ஓடிருக்க,
       ஆடு மாடு கோழி எல்லாம் அற்புதமாய் வாழ்ந்திருக்க.
உழமையிலே எம் நாடு பெருமை பெற்று நிலைத்திருக்க,
       இயற்கை அன்னை நீ கொடுத்த அத்தனைக்கும் நன்றியம்மா.


குழந்தை. கவிதை

குழந்தை



மழலை குரல் கேட்டிடவே  மாதம் பத்து  அந்தம்மா,
              பிறந்தவுடன் அழுதிடவே பெற்ற மனம்  துடிகித்தமா
நீ பார்த்த பார்வையிலே  பத்து நிலவு தெரியுதமா,
             சின்ன இதழ் சிறிப்பினிலே என்னை மறந்து போனெனம்மா
அம்மா என்று அழைத்திடவே ஆயிரம் பகல் போனதம்மா
              சின்ன சின்ன குரும்பினிலே துன்பமெல்லாம் விலகுத்தம்மா
நகரும் என் பொம்மையம்மா நெஞ்சிக்குள்ளே இனிக்குதம்மா

காதல் கவிதை

காதல்  




மனதே நினைத்தாலும் மறக்கமுடியாத  அன்பு காதல்,
          மனத்துக்குள் தோன்றும் மரண வலி காதல்.
ஆசையின் வெளிப்பாட் டை அறியவைத்த காதல்,
          அன்பின் ஆழத்தை உணர்த்துவது காதல்.
ஒரு மனதை மறு மனதோடு இணைப்பது காதல்,
         பிர பொருட்களை ரசிக்க வைத்த காதல்.
தனக்காக துன்பத்தையும் ஏற்றுக் கொண்ட காதல்,
         மரணமே வந்தாலும் மறையாத காதல்.
என்னை மட்டும் நேசிக்க வைத்த காதல்,
          என்னிடம் உன்னை சேர்த்த காதல்.
உன்னை நினைக்க வைத்த காதல் ,
           உன்னை மறக்க  கற்று தர வில்லை.
அதற்கு மாறாக எனக்கு மரணத்தை தந்தது .
          
                                                               _💐காதலை காதல் செய்யவைத்த காதலுக்கு நன்றி.

Friday, 20 July 2018

பெண்ணின் வறுமை

  பெண்ணின் வறுமை


வணக்கம்
  திலகம் என்று ஒரு பெண்மணி வசித்து வந்தால் அவள் குடும்பத்தின்நான்கு பெண் குழந்தைகள் . ஐந்து பெற்று எடுத்தால்  அரசனும்  ஆண்டிதான், பழமொழிகிணங்க அவர்களின் வாழ்க்கையிலும்  அப்படித் தான் இருந்தது.
         
அவள் நான்காவது பெண்மணி அவளுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளலார். அவள் குழந்தை மிகவும் அழகானவள் அவள் கணவர்  அவளோடு அன்பாக இருப்பார். காரணம் அவர்களின் திருமணம் காதல்  திருமணமாகும் அவள் திருமனத்தில் அதிகமான எதிர்ப்பு ,அதை மீறி அவள் எப்படி திருமணம் செய்து கொண்டால்.

 அவள் சேவுலியராக பணிப்புரிந்து வந்தால் அவளுக்கு அங்கே அதிக ஊதியம் இல்லாத காரணத்தால்  அவள் வேறு இடத்திற்கு வேலை தேட ஆரம்பித்தாள். அவளுடைய குழந்தை வயதுத்தோழி  அவளுக்கு
நான் ஒரு நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைச்செய்கிறேன் என்னோடு வா உனக்கும் அதே நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி அழைத்துச் சென்றால் , அவளும் தன் குடும்பத்தின்  வறுமையின் நிலை அறிந்து, வேலைக்கு செல்ல முற்பட்டால் இருந்தாலும் அவளுக்குஉ மனதில் ஒரு குழப்பம்  படித்த பெண்ணுக்கு சரியான ஊதியம் இல்லையே என்று . அதை தன் அம்மாவிடவும் ,அப்பாவிடவும் தெரிவித்தாள்,முதலில் வேண்டாம் எண்றவர்கள் பின்பு நிலை அறிந்து ஒற்று கொண்டனர்.


_தொடரும்



பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....