Sunday, 26 August 2018

பாரதியார் விடுதலை

பாரதியாரின் விடுதலை



முன்னுரை:

செந்தமிழ் பாவளன் பாரதி .இருளடைந்த இந்திய திருநாட்டிற்கு ஒளியாக
20-நூற்றாண்டில் உதித்தார். நாம் வாழும் சூழ்நிலையில் நாட்டின் அவல
நிலையை கண்டு கொதித்தெழுந்தார். வீர சுதந்திரம் வேண்டி  எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமை,இனிமை,புதுமை, 
நிறைந்த பாக்களை இயற்றினார். அதனை இக்கட்டுரையில் காண்போம்

பாரத நாடும் பாரதியாரும்:

பாரதம் என்பதற்கு இலக்கணம்  வகுக்கும் பாரதியார் "பாருக்குலே நல்ல நாடு எங்கள் பாரத நாடு"என்று 

பழம் பாரதத்தை"நாணத்திலே, பாரா மோனத்திலே,உயர்மானத்திலே ,
அன்னதானத்திலே உயர்ந்த நாடு"என மொழிந்து பெருமிதம் அடைந்தார்

ஆனால் அவர் காலத்தில் அடிமைப்பட்டிருந்த பாரதத்தை எண்ணி "நெஞ்சி பொறுக்கு தில்லையே இந்த நிலைகொண்ட மனிதரை நினைத்து விட்டால் "என கூறிக்  கண்ணீர் வடிக்கிறார்.

பெருமை இழந்த பாரதமும் ,பாரதியாரின் எண்ணமும்:

எட்டையபுரத்தான் வாழ்ந்த காலத்தில் பாரதம் ஒற்றுமைக்கு  ஊறாய்
-உறவுக்கு கேடாய்- வளமான வளர்ச்சிக்குப் பகையாய் வேற்றுமைகள்
மிகுந்து.தன் பெருமையிணை இழந்து தாழ்வுற்றிருந்தார்.

      தாழ்வுற்ற பாரதம் தலைநிமிர்ந்திட
இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும்
பந்திரு இரண்டும் மாறி பழிமிகுந் திழிவுர் ராலும்
விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி நின்னை தொழித்திடல் மறக்கிலேனே
என்று விடுதலை வெட்கையை மக்களிடையே உருவாக்கினார்

பாரதியின் விடுதலை உணர்வு:

ஒன்று பட்டால் உண்டு  வாழ்வு_நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே 
என்று பாடி மக்களிடையே ஒற்றுமை தாக்கத்தை ஏற்படுத்தினார்
தண்ணீர் விட்டா வளர்த்தோம் _ சருவெசா
கண்ணீரால் காத்தோம் கருக திருவுலோமோ?
என்ற சுதந்திர பயிரை கண்ணீரால் செந்நிறாலும்  காக்க வேண்டும் 
என்கிறார் ."சுதந்திரம் எனது பிறப்புரிமை என மொழிந்த திலகரின் 
வழி நின்றார் பாரதி."சொந்த நாட்டில் பிரர்க்கடிமை செய்தே துஞ்சிட்டோம்_இனி துஞ்சிட்டோம் என்று வீரமுழக்கமிட்டார்

பாரதியாரின் விடுதலை கனவு:

"எல்லோரும் ஓர் குளம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நீரை எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 

எனப்பாடி உயர்வு தாழ்வற்ற சமதர்ம விடுதலை நாட்டை எண்ணிக் 
கனவு கண்டார்.

"ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

என்று விடுதலை பெறும் முன்னே விடுதலை பெறுவதை தம் அகக்கண்ணால் கண்டு மகிழ்ந்து தீர்கத்தரிசி பாரதி ஆவார்

பல்வேறு விடுதலை உணர்வு:

பாரதி அரசியல் விடுதலையை மட்டுமல்லாமல் மொழி விடுதலை  ஆன்மிக விடுதலை சமுதாய விடுதலை, பொருளாதார விடுதலை, பெண்
விடுதலை, ஆகிய அனைத்து விடுதலிகளுக்கும் குரல் கொடுத்த மூத்த
பாவளன் ஆவார். நாட்டுப் பற்றோடு ,இறைபற்றையும் ,மொழிபற்றையும்
ஊட்டவே . தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தால்
வேண்டும் என்று அறைக்கூவல் விடுத்த உணர்வாளர்.


முடிவுரை:

பாட்டுக்கொரு புலவன் பாரதி 20 ஆம் நூற்றாண்ட்டிற்கு ஏற்ற எழில் மிகு
பாரதத்தை உருவாக்க எண்ணி விடுதலை உணர்வை ஊ ட்டி விடுதலையை ஈட்டி தந்த மாபெரும் கவிஞர் ஆவார்.அவர் காட்டிய வழியே சென்று நாட்டின் நலிவை நீக்கி நாட்டை பொலிவடையவோமாக! 
வேற்றுமையை விடுத்து ஒற்றுமையுடன் காண்போமாக!நம்மை வளர்க்கும் நற்றமிழை ப் பேணி நல் வாழ்வை அடைவோமாக






Saturday, 25 August 2018

காமராசர் கட்டுரை

காமராஜர் 


மூன்னுரை:

👍.பெருந்தலைவர் ,கர்மவீரர் ஏழைப்பிங்காலர் ,படிக்காத மேதை என்றெல்லாம் அழைக்க பெற்றவர் காமராசர் தன் நலம் சிறிதும் 
இல்லாதவர் பொது நலம் கருதி வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்
காட்சிக்கு எளியவர் கருத்துக்கு இனியவர்  அப்பெருமாகனாரைப்
பற்றி இக்கட்டுரையில் காண்போம் .

இளமையம் கல்வியும்:

15.05.1903 அன்று குமாரசாமிகும் சிவகாமி அம்மையாருக்கு அருதபப்
புதல்வனாக பிறந்தவர் காமராஜர்  இவரது இயர்ப்பெயர் காமாட்சி
அவர் தம் ஆறாம் வயதிலேயே தந்தையை இழந்தார். தாய்மாமன் ஆதரவில் குடும்பம் இயக்கியது.  குடும்ப சூழ்நிலை காரணமாக  தாய்மாமன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார் . அப்பொழுது
விடுதலை போராட்ட தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது
காந்தியடிகளின் கொள்கையால் இருக்க பட்ட காமராசர் .  நாட்டு விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபடலானர் .

சமுதாயத்தின்  தொண்டு :

சமுதாயத்தில் பெரும்பகுதி மக்கள் ஏழ்மையிலும் ,அறியாமையிலும் மூழ்கிக்கிடந்தத்தை தற்குரிகளாக தாழ்ந்து கிடந்ததை  சமுதாய அவமானமாகவே கருதினார். காமராசரின் இரண்டு கொள்கைகள்
நாட்டு புறங்களில் பாய்ந்தன ஒரு மின்சாரம் ,மட்ரோண்டு  ஊர்தோறும்
பள்ளிகள் ஏழை வீட்டு குழந்தைகள் கல்வி கண் பெறவேண்டும் என்பது
காமராசரின் தணியாத விருப்பம் அந்த விருபத்திலேயே மதியஉணவு
திட்டமும் உருவாக்கியது இத்திட்டத்தை வித்திட்டவர் அவர்

கட்சி பணிகள் :


காங்கிரஸ் கட்சி நலிவடைந்த போது அதனை வலிமை படுத்த தலைவர்க்கெல்லாம் கூடி சந்தித்தனர் அப்பொழுது மாநில முதல்வர்களும் நெடுங்காலமாக ஆட்சில் இருப்பவர்களும் பதவி விலகி கட்சி பணியில் ஈடுபட வேண்டும் என அறிவித்தார் . தாமே முதலமைச்சர்
பதவியை துறந்து இத்திட்டத்தை செயல் படுத்த வழிவகுத்தார்.

முடிவுரை:

முதளமைச்சர் பதவியை துறந்த காரணத்தால்  அதனை பாராட்டி அன்று பிரதமராக இருந்த நெருவே நாடாளுமன்றத்தில் பாராட்டினார் . உழவும்,
தொழிலிலும்  சிறக்க பட்டர் .

Friday, 17 August 2018

கர்ப்ப காலத்து பெண்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய 


வேண்டியவை





👧.பெண்களுக்கு  இயர்க்கையான கிடைத்த ஒரு வரம் கருத்தரித்தல் அதனை பெண்கள் எவ்வளவு கவனமாக  இருந்து கருவை வளர வைப்பதற்கும்.அதனை பாதுகாப்பதற்கும் முயர்ச்சி செய்கின்றன.

👸.பெண்கள் நான் கருவுற்றேன் என்று தெரிந்து கொள்ளவதற்கு 40 நாட்கள் ஆகின்றன . மாதவிடாய் நின்றுபோனதும் அதனை பரிசோதை மூலம் தெரிந்து கொள்கின்றன . 

👩.முதல் 3 மாதங்களில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . கருவுற்ற காலத்தில் வாந்தி, மயக்கம்,நெஞ்செரிச்சல், தலைவலி, மலச்சிக்கல் , போன்றவை ஏற்படும்

👱.இதற்கு முக்கிய காரணம்  சிசு வளர வளர தாயின் வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் மாறுபடுகின்றன. இதனை(Harmon
Chenges)என்று அழைப்பார்கள்

👧.முதல் 3 மாதத்திற்கு அதிக அளவு காய்கறிகள்,பழங்கள்,உட்கொள்ளவேண்டும்.ஏனென்றால் குழந்தைகக்கு போதுமான ஊடச்சத்து  தேவைப்படுகின்றன.5மாதம் வரை சிசு தகுந்த எடையில்
இருப்பது நல்லது

👸.சாப்பிடக்கூடாத பழங்கள் பாப்பாளி பழம், அண்ணாச்சிப்பழம்,
, பலாப்பழம், இவைகளை தவிர்க்க வேண்டும்

👸.காய்களில் பேரிக்காய், சுரைக்காய், முள்ளங்கி , வாழைத்தண்டு,
இவைகளை தவிர்ப்பது நல்லது.

👵.மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது .கருவுற்ற தாய்க்கும் 
சிசுக்கும் இரும்பு ச்சத்து கிடைக்கும் மேலும் குழந்தை அரோகியத்துடனும் பொலிவுடனும் இருக்கும்

👸.கருவுற்ற தாய் 5 மாதம் வரை கனமான பொருட்களை எடுத்து செல்ல கூடாது.படிகளில் செல்வதை தவிர்ப்பது நல்லது. சத்து மாத்திரை தவிர
வேறு மாத்திரைகள் உபயோக படுத்த வேண்டாம்

👸.7 மாதத்தில் நன்றாக வேலை பார்ப்பது நல்லது உலர் திராட்சை, பழ வகைகள் நன்றாக உட்கொள்ளவேண்டும்


Thursday, 16 August 2018

மூட்டு வலி குணமாக நாட்டு மருந்துகள்

மூட்டு வலி நிவாரணி


 🙏.மூட்டு வலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல, மூட்டுக்கு மூட்டு 
மாறி மாறி  வலிக்கும் .எனவே நீங்களே தேர்வு செய்து மருந்துகளை உபயோக படுத்துங்கள்  முடக்கத்தான் சூப்,வாதனாராயணன் கீரை
சூப்,அகத்தி கீரை சூப் ஏதாவது ஒன்றுத்தேர்வு செய்து சாப்பிடவும்

💪.கால்சியம் சத்து குறைவு,நோய் எதிர்ப்பு தன்மை  இல்லாமை இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவை மூட்டு வலிக்கு காரணம். ஏனது அசைவ உனவை தவிர்த்து அதிக காய்கறி பழங்கலை
சேர்த்து கொள்ளவேண்டும் கால்சியம் நிறைந்த பால் பொருட்களை சாப்பிடவும்.உப்பை குறைத்து கொள்வது நல்லது.

😊.ஆரிப் போன புழுங்கலரிசி சாதத்தை உண்ணும் பழக்கம் உள்ளவருக்கு,கீழ்வாதம் மூட்டு வலி உண்டாகும். பச்சரிசி சாதத்தினால்
உடல் வலிமை உண்டாகும். சிறுநீர் எரிச்சலும் ,பித்தமும் போகும்.இதனுடன் சிறிது நெய் சேர்த்து உண்பது நல்லது.இல்லை என்றால் உஷ்ணத்தையும் வாயுவையும் உண்டாக்கும்

🙌.காசு கட்டியை தேங்காய் எண்ணெயில் குழைத்து சேற்றுப்புண்ணுக்கு
இடவும் அல்லது பழைய வெள்ளை துணியை பருத்தி ஆடை சுட்டு அச்சாம்பளை தேங்காய்  எண்ணெயில் குழைத்து பாதங்களில் உள்ள வெடிப்பு களில் தடவ உண்டாகும்

வயிற்று போக்கு நிற்க நாட்டு மருந்துகள்

வயிற்று போக்கு நிற்க மருந்துகள்



🍂.மஞ்சளை ஒரு துண்டு எடுத்துத்  தூளாக்கி சூடு பண்ணும் கரண்டியில்
போட்டு வருத்தல் தீ மாதிரி அகிவும் அதில் அரைதேகரண்டி ஓமத்தை 
தூவினால் அடி வேக்கும் போது அரை டம்ளர் தண்ணீரில் ஊற்றிக் காய்ச்சி வடிகட்டி அதில் அரை பாலாடை அளவு  தண்ணீரை ஒரு முறை 
கொடுத்தாலே சரியாகிவிடும் 

🌳.எளிய உபாய மருந்து என்றால் வெறும் கொய்யா இலையை மென்று
தின்றாலே போதுமானது 

🌰.மாதுளம் பழத்தோலை அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்து
உண்ணலாம்

🌴.வாழை பூவை அறைவேக்காடக சமைத்து சாப்பிட்டால் சீதபேதி
மதுமேகம் நீங்கும்

🍑.மாதுளம் பூ, மங்கோட்டை பருப்பு ,ஓமம் ,ஆகியவற்றை சமஅளவு
எடுத்து காயவைத்து பொடி செய்து சலித்து  மோரில் கலந்து சாப்பிட்டால் 
வயிற்று போக்கு குணமாகும் .

💮.மாசிக்காயை போன் வருவலாக வறுத்து இடித்து ,தூளாக்கி அதில் 
ஒரு சிட்டிகை எடுத்து தென் சேர்த்து உள்ளுக்கு கொடுத்து வந்தால்
சீதபேதி,இரத்தபேதி ,எல்லாம் நின்றுவிடும்

🍁.சுக்கு ,மிளகு, திப்பிலி, ஓமம் இதையெல்லாம் சம அளவு எடுத்து
பொன் வருவலாக வறுத்து ,பொடியாக்கி அதோடு சரிசமமாக பணங்கற்கன்டு சேர்த்து வைத்து கொள்ளவும் அதில் ஒரு தேக்கரண்டி 
எடுத்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு 
குணமாகும்.

🌺.வில்வம் காய் விதை&மலர்கள் வயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு நிறுத்தத்திவிடும்



தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

தமிழ் மொழியின் சிறப்பு



முன்னுரை:

🌏.நம் எண்ணங்களை பிறருக்கு தெரிவிக்கவும் ,பிறருடைய  உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவும் உதவுவது மொழியேயாகும்.
நாகரிகம் வளர வளர பேச்சி வழக்கு மொழியெல்லாம் எழுத்து வடிவம் பெற்றன.காலத்தால் பழமையான, ஆதிகால மனிதனின் அற்புத மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழின் சிறப்புகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பைந்தமிழ் சிறப்பு:
🌍.காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடைய மொழியாக தமிழ் மொழி திகழ்கிறது.இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழாய் வளந்து.கன்னிதமிழாய் , செந்தமிழாய்,வண்டமிழாய்
பைந்தமிழாய்,வளம் வரும் ஒரே மொழி தமிழ் மொழியாகும். எண்ணற்ற
புலவர்களாலும் ,அரசர்களாலும் சங்கம் வைத்து தடத்த பட்ட ஒரே மொழி  தமிழ் மொழியாகும்.

செம்மொழியின் பண்புகள்:

🌍.செம்மொழியாய் தமிழ் சிறப்புற்று விளங்குவது தமிழர்கள் செய்த பெரும் பேராகும். தமிழின் தொன்மை ,பிறமொழி தக்கமின்மை, தாய்மை
இலக்கிய வளமை,இலக்கண செழுமை ,நடுவுநிலமை,உயர்ந்த விழுமிய
சிந்தனைகள்,கலை இலக்கியத்தன்மை, மொழிக்கோட்பாட்டுத் தன்மை
செம்மொழிக்குரிய பண்புகள் மொழியளர் கூறுகின்றனர்.

தமிழ் இலக்கிய வளமை:
🌍.உலக இலக்கியங்காலில் முதன்மை பெற்றவை சங்க இலக்கியங்கள் 
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை பதினொன்கிழ்கணக்கு நூல்கள் இன்றலவும் தமிழ்மொழியின் இலக்கிய வளத்திற்கு இன்பம் சேர்கின்றன.தமிழ்மொழியில் உள்ள இலக்கியங்களைப் போல வழமையான,செழுமையான இலக்கியங்கள் உலகிலுள்ள வேறெந்த 
மொழியிலும் இல்லை எனசெட்டு மொழியில் பேரறிஞர் கமில்சுவலபில் கூறினார்.ஒரு மொழியின் இலக்கியங்களை வைத்துத்
தான் அம்மொழியில் செழுமையை அறியமுடியும்.

இலக்கண வளம்:

🌎.ஒரு மொழியின் இலக்கண வளமே பற்பல இலக்கியங்கள் படைக்க 
முன்னோடியாக திகழ்வதற்கு வழிவகுக்கும். தமிழ் மொழியின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்து, சொல், பொருள் ,ஆகிய மூன்றானுக்கும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. தொல்காப்பியரின் ஆசிரியராணா அகத்தியரின் அகத்தியம் 
ஐ ந்திலக்கனங்களின் அருமையை எடுத்துரைக்கிறது . நன்னுள் 
தண்டியலங்காரம் சதுரங்காதி  போன்ற இலக்கண  நூல்கள் தமிழ்மொழிக்கு அணிகலன்கலாய் அழகு சேர்கின்றன.

வாழும் இலக்கியம் :

மக்களின் அன்றாட நிகழ்வுகளை வெளிப்படுத்தும்காலகண்ணாடிகளாய் இலக்கியங்கள்  திகழ்கின்றன யாதும் ஊரே  யாவரம்கேளிர்,பிறபோகும் எல்ல உயிருக்கும் ,தீதும் நன்றும் பிறர் தர வாரா ,,உண்டாம் இவ்வுலகம்  சுழன்று ஏர்பின்னது உலகம் போன்ற இலக்கிய உலகில் அடிகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு வழிகாட்டும்
கலங்கரை விளக்கங்களாய் திகழ்கின்றன .ஒவ்வொரு இலக்கியமும்
ஒவ்வொரு இலக்கை குறிக்கோளை மக்களிடையே விதைத்து பண்பட்ட
மனிதர்கலாய் வாழ வழிவகுத்தது .

முடிவுரை:


தமிழ் தனித்தியங்கும் வலிமையுடையது காலத்தால் அழியாத கன்னி தமிழாய் இளமையுடன் திகழக்கூடியது .பிறமொழி கழிப்பில்லாமல்
வளர்ந்தோங்கும் செழுமையுடைய மொழி தமிழ் மொழியாகும் .இத்தகைய வளமை பொருந்திய  தமிழ்மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.



நன்றி வணக்கம்!!!









Monday, 13 August 2018

சுதந்திரக் கவிதைகள்

சுதந்திர தின கவிதைகள்



நாம் பிறந்த மண்ணிலே அடிமையாக கிடந்திருந்தோம்
           விடிவெள்ளி தோன்றிடவே மகிழ்ச்சியாக எழுந்திருந்தோம்
வீரர் பலர் தோன்றிடவே  அச்சம் இன்றி எதிர்த்து நின்றோம்
          பாரதியார் பாடிடவே பாரதத்தை புரிந்துகொண்டோம்
எம் நாடு என உரைக்க குரல் தன்னை உயர்த்தி நின்றோம்
          கொடி தன்னை கையில் ஏந்தி வந்தே மாத்திரம் முழக்கமிட்டோம்
வெள்ளையனே வெளியேறு என உரைத்து கூச்சளிட்டோம்
         நடு இரவில் சுதந்திரத்தை பெற்றிடவே மகிழ்ந்திருந்தோம்
சுதந்திரதத்தை பேணி காக்க அயராது உழைத்து நிற்போம் 

வீரர் பலர் காத்து நின்ற சுதந்திரம் 
       கொடியை ஏற்றி நின்ற எங்கள் சுதந்திரம்
வெள்ளையனை வெளியேற்றிய சுதந்திரம்
      பல வீரர்களால் கிடைத்த எங்கள் சுதந்திரம்
எம் நாடு என உரைத்த சுதந்திரம்
      பெண்களையும் காத்து நின்ற சுதந்திரம்
பாரதியார் பாடி வந்த  சுதந்திரம் 
     எங்களையும் பாட வைத்த சுதந்திரம்

                            
                                                                                       🌷.கனிஷ்கா

Sunday, 12 August 2018

குடல் புண் அல்லது அல்சர்

குடல் புண்


🍅.மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால்
      வயிற்று புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும்
🍌.பச்சை வாழை பழத்தை தொடர்த்து சாப்பிட்டு வந்தால் குடல்களில்
     பழுது பட்ட மெல்லிய சவ்வு தோள்கள் விரைவில் மலர செய்து 
     புன்னை ஆற்றும்
 🌱.பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது .இதனை சமைத்து உண்ண
      வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறும்
      மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்
🍄.வாகை மரப்பிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெய் 
     கலந்து உட்கொண்டு வரலாம் 
🌿.தண்டு கீரையில் இரும்புச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிச்சியடைந்து மூலநோய் மற்றும்
    குடல்புண் ஆறும்

வயிற்று வலி நீங்க நாட்டு மருந்து

வயிற்று வலி நிவாரணி


💧. கொதிக்கும் நீர் ஒரு டம்லரில் தேன் விட்டு கலக்கி குடிக்கலாம்
💧.முருங்கை இலை சாறு 2 தேக்கரண்டி வீதம் 2 வேலை பருக 
     வயிற்று வலி நீங்கும்
 💧. 200 மில்லி கொதி நீரில் 10 கிராம்பை நசுக்கி போட்டு வேலைக்கு
      1 தேக்கரண்டி வீதம் சாப்பிடவும்
💧.அருகம்பிள்ளும் வேப்பிளையும் சம அளவு எடுத்து கசாயம் வைத்து
      தினமும் அரை டம்ளர் என 3 நாடகள் அருந்த வயிற்று வலி 
     குணமாகும்
💧.கடம்பு பழசாற்றோடு சிறி தளவு தேன்  அல்லது சக்கரை சேர்த்து
     உட்கொள்ள வயிற்று வலி குணமாகும்

பற்பொடி தயாரிப்பது எப்படி நாட்டு மருந்து

பற்பொடி நாட்டு மருந்து

🍐.விதை நீக்கிய கடுக்காய் 4, தான்றிக்காய் ,4 சுக்கு,2மிளகு,
     2,மாசிக்காய் ,2அதிமதுர வேர் ,2 குச்சி ,காசுகட்டி ,20கிராம்
     கல்நார் 10கிராம்,ஏலக்காய்10கிராம், மருதம் பட்டை 100
     கிராம்,ஆகிய பங்கு அளவில் வருத்துக் கலந்து பொடித்து
     சலிக்கவும் .தேவையான அளவு இந்து உப்பு&சூடன்
     ஆகியவற்றை கலக்கவும் .எதனால் பல் துலக்கி வர பல்
      வலி, பல் அசைவு ஈறு வீக்கம், பற் சொத்தை ,குருதி முதலியன
     நீங்கி பற்கள் வலிமை பெறும்
🌼.பொடித்த கற்பூரம் கால் தேக்கரண்டி ,வெப்பந்தூல் அரை 
     தேக்கரண்டி ,உப்புத் தூள் ,சக்கரை 1 தேக்கரண்டி அளவில்
     சேர்த்து நாலு துளி எலுமிச்சை சாறு விட்டு கலந்து வாரம்
     இரண்டு முறையாவது இந்த கலவை பற்பொடியில் பல்
      தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவதுடன் பற்களின் கரையும்
      விலகி பற்கள் பளீர் பளீர் வெண்மையாகும். இந்த பவுடரை
      தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம்
      விலகும்
🐓. கற்றை காம்பு 10கிராம்,படிகாரம் 10கிராம், சீமை சுண்ணாம்பு 
       25கிராம், அளவில் சேர்த்து பொடித்து சலித்த பற்பொடியினால்
      காலை மாலை பல் தேய்த்து வர ரத்தக் கசிவு &பற்ஈரில் புண்கள்
      குணமாகும்

பற்களுக்கான நாட்டு மருத்துவம்

பற்கள் சுத்தமாக வைத்து கொள்ள மருந்துகள்


🎂.இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்படும்.
      எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களை
       சுத்தம் செய்ய வேண்டும்.
☕.தேநீர் ,காபி ,போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும் குளிர்ந்த நீர் 
     குடிப்பதும் கூடாது.
🍭.பப்பாளிச் செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு
      வலியுள்ள பல் மீது தடவி வர பல் வலி தீரும்
🌳. ஆலம் மொட்டை ,அல்லது பாகற்காய் இலையை அல்லது 
     நந்தியா வட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால்
     நன்றாக மென்று வாயிலே அடக்கி வைத்து பிரகு துப்பிவிட
     பல வலி நீங்கும்
🌳.அத்தி மரத்து இலைகளைத் தண்ணீரில் கொதிக்கவைத்து 
     வெது வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க 
     வாய் புண்,பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய் 
     குணமாகும்.

Friday, 10 August 2018

முகப்பரு நீங்க நாட்டு மருந்து

முகப்பருநிவாரணி:

    🔥.முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து
          சுரக்கும்  'சீபம்' என்னும் எண்ணெய்க் கசிவு முகத்தோலின் மீது
         படிவதால், பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை
         முகபருவாக மாறுகிறது . நவ நாகரீக உணவுகளை தவிர்க்க
         வேண்டும்
   🔥.முகப்பரு இருந்தால் உடனே கிள்ளியெறிந்து விட விரல்கள் 
        முயற்சிக்கும் .கிள்ளினாள் பெரும் விளைவுகள் உண்டாகும்
        முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள்
    
   🔥.வேப்பிலை, பொடியுடன், மஞ்சள் தூள் ,சந்தனம் சேர்த்து நீர் விட்டு 
        குழைத்து பருக்களின் மீது பூசிவரலாம்.
    🔥.வேப்பிலை பொடி, புதினா பொடி, துலசிப் பொடி ,இவைகளை 
          தள பத்து கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடு
          தண்ணீறில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் தழைத்து 
        முகத்தில் தடவவும்.கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக்கூடாது
         15நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரீல் கழிவு விடவும்
        தொடர்ந்து நாலு அல்லது 5 நாட்கள் செய்தல் பருக்கள் மறையும்
    


Tuesday, 7 August 2018

மூக்கில் இரத்தக்கசிவு நாட்டு மருந்து

மூக்கில்  இரத்தக்கசிவு  நிவாரணி

🐽.பூரசம் பட்டையின் கசாயத்தை குளிரவைத்துச் சக்கரை அல்லது
           தேன் சேர்த்துப் பருக இரத்தத் கசிவை உடனே நிறுத்திவிடும்
      🐽.கரும்புத் துண்டுகளை இடித்துப் புதிய மண் பானையில் வைக்க
            பட்டுள்ளள நீரில் போட்டு, மலர்ந்த தாமரை பூவை அதன் மேலிட்டு
            இரவில் பாதுகாத்து வைத்திருந்துக் காலையில் வடிகட்டிப் 
            பருகினால் இரத்தக் கசிவு உபாதயில் இருந்து விடுபடலாம்
       🐽. சாதாரணத் தண்ணீர் பருக்குவதற்குப் பதில் சந்தனம் , 
             விளாமிச்சை வேர் ,கோரைக் கிழங்கு ,திப்பிலி ஆகியவற்றை 
             சிற்றாமுட்டித் தண்ணீறில் இரவு ஊரா வைத்து கஷாயமாக பருக
             இரத்தகசிவை நீக்கிட்டும்










ஆஸ்துமா நாட்டு மருந்து

ஆஸ்துமா நிவாரணி 


💎.குப்பைமேனி  இலை ,குன்றுமணி இலை, முருங்கை இலை ,
      கற்பூரவள்ளி இலை ,கோவைக்கோடி, வெங்காயம் ,இஞ்சி,
       அல்லது சுக்கு கொன்றை மரப்பட்டை,&தூதுவளைத் தூள்
     தும்பை பூவின் சாறு ,மாதுளம் பழம் ,&எழுமிச்சை சாற்றுடன்
      தான்றிக்காய் தோல், இலுப்பைப் பூ, மணத்தக்காளி கீரை
       இவைகளில் தனிதனியாகவோ ,ஒன்றிரண்டு சேர்த்து சமைத்து
      உணவுடனோ ,கசாயமாகவோ அருந்தவும் ,

💎.குமட்டினால் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளவும்
      சிலவற்றை காயவைத்து பொடி செய்து தேனில் கலந்துசாப்பிடலாம்




       

தொண்டை வலி மருந்துகள்

  • தொண்டை வலி நிவாரணி 





🌹.சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்நீரை துப்பிவிடாமல்
     குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டை புண்
      குணமாகும்
🌹.தேங்காய்ப்பால்,மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து
      50-100மில்லி குடித்து வரலாம்
🌹.தேங்காய் பாலின் மாஸிக்காய்  ( அல்லது) வசம்பு துண்டை உரைத்து
     சாப்பிட தொண்ண்டைப் புண் குணமாகும்

🌹.இஞ்சியுடன் 4 கிரம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சூடாக்கி
     தொண்டையின் மேல் பூசிவரவும்

🌹. இரண்டு எலும்பிச்ச பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில்
       படும் படி நன்றாக கொப்பளிக்கவும்
🌹.அதிமதுரம்,சுக்கு ,சித்தரத்தை இவற்றை பிடி செய்து பாலில் கலந்து
      சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பணங்கற்கண்டு சேர்த்து
       குடித்து வர வலி குறையும்

      

Saturday, 4 August 2018

பித்த நிவர்த்தி மருந்துகள்

பித்த நிவர்த்தி மருந்துகள்




🌷. சுக்கை தூள் எழுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும்
🌷.100கிராம் திராட்சை உளர்ந்ததை 200 கிராம் கடுக் காயுடன் சேர்த்து
      அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டுவற பித்தம்
      வாந்தி, வைகசப்பு தீரும்
🌷.சுக்கு , மிளகு,திப்பிலி,விளாமிச்ச வேர் ,கிராம்பு,ஆகியவைகளை
     வகைக்கு 10கிராம் வீதம் எடுத்து தூள் செய்து அந்த தூளை தினம்
     2வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர
     தலை சுற்றல் ,பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்

🌷.திப்பிலி 5 கிராம் மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூளை
      விளம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் மற்றும் தலை
       சுற்றல் குணமாகும்

தமிழ் வளர்ச்சி

                தமிழ் வளச்சி



  தமிழ் நூல்களை எளிய நடையில்  எழுதுதால் வேண்டும் .இலக்கண
நூல்களைப்  புதிதாகப் படைத்தல் வேண்டும் உலகின் புதிய ஆய்வுச்
சிந்தனைகளைத் தமிழ் படுத்தி விளக்கப் படகளுடன் நுல்களாக்கிச்
செந்தமிழாய்ச் ,செழுந்தமிழய்ச் செய்தல்வேண்டும்.வருமையினால்
தமிழன் ஒருவன் கல்லாத நிலையில் ஏற்படுமானால் , இங்குள்ளோர்
நாணம் அடைதல்வேண்டும் பல்வேறு துறை நூல்களைப் பிறர்
துணையின்றி எல்லோரும்  படித்தரிந்துகொள்ளும் வகையில் தமிழில்
வெளியிடல்வேண்டும் . தமிழறிவை  மாதங்களுக்குள் அடக்காமைவேண்டும் இலவச நூல்நிலையங்கள்  ஊர்தோறும் ஏற்படுத்தல் வேண்டும் தமிழில் பெருமைகளைக் கூருவதிலேயே  காலம்
கழித்தோம் குறைகளை நீக்கிப் புதுமைகளைப்  படைத்தோமில்லை
உலகின் ஒளிமிக்க மொழியாகத் தமிழை வளர்த்தோம் வாரீர்

Friday, 3 August 2018

சிலப்பதிகாரம் கதை பாடல்கள்

                                    மதுரைக்  காண்டம்
                                    
      வாழியெம் கொற்கை வேந்தே  வாழி
      தென்னம்  பொறுப்பின்  தலைவ  வாழி
      செழிய  வாழி     தென்னவ    வாழி
       பழியோடு   படராப் பஞ்சவ  வாழி
      அடர்த்தெழு  குருதி.  யாடங்காய் பசுந்தணிப்

      
      பிடர்தலைப் பீடம்  எரிய    மடக்கொடி
      வெற்றிவேல்  தடக்கை  கொற்றவை அல்லள்
      அறுவர்க்   கிளைய  நங்கை  இறைவனை
      ஆடல்கண்  டருளிய  அணங்கு சுருடைக்
       கானகம் உகந்த  காளி . தாருகன்
   
       பேரூரங்  கிழிந்த பொண்ணு. மல்லள்
        சீற்றனள்  போலும் செயிர்த்தனள்  போலும்
        பொற்றொழிற் சிலம்பொன்  றேந்திய  கையாள்
        கணவனை  இழந்தாள்  கடையகத் தாளே, என
        வருக  மற்றவள்  தருக  ஈங் கென

       வாயில் வந்து கோயில் காட்டக்
       கோயில் மன்னனைக் குருக்கினள் சென்றுழி
       நீர்வார் கண்ணை  எம்முன் வந்தோய்
       யாரை யோனி மடக்கொடி யோய்எனத்
       தேரா மன்னா செப்புவ துடையேன்

       எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
        புள்ளுறு புன்கண்  தீர்த்தோன் அன்றியும்
        வாயிற் கடைமணி நடுநா  நடுங்க
       ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
        அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

       பெரும்பெயர்ப்  புகாரென்  பதியே அவ்வூர்
       எசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
       மாசாத்து வாணிகன் மகனை யாகி
       வாழ்தல் வேண்டி  ஊழ்வினை துறப்பச்
      சுழ்கழல் மன்னா நின்னகரப் புகுந்தீங்

     




         



மனித நேயம் கதை

மனித நேயம்


இந்தியாவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த அவர் , நாளொன்றுக்குப்
பதினெட்டு மணிநேரம் முதல் இருப்பது மணி நேரம் வரை கடுமையாக 
உழைப்பார். சில நாள் அவருக்கு வீடுத்திரும்ப நள்ளிரவு ஆகிவிடும்.


ஒரு நாள் அவர் நல்ளிரவுக்குமேல் வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் வீடு திரும்பினார்.நெடுங்காலமாக அவரிடம் வேலைபார்த்து வரும் காவலர் , இன்று கலைப்பு மிகுதியால் உறங்கிகொண்டிருந்தார்.

அவருடன் வந்த மற்றவர்கள் அந்த காவலனை எழுப்பச் சொன்னார்கள்.
அவர்களை தடுத்து நிறுத்தி பாவம் வயதானவர் , அவரை ஏழுப்பாதீர்கள்
அவர் தூண்கட்டும்  என்று கூறியவாறே தாமே அறையின் திறவுகொலை எடுத்து சென்று  அறையை திறந்தார்.

அவரோடு வந்த வெளிநாட்டு நண்பர்கள் தமது கட்டுரை ஒன்றில்
அவரின் மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டை என் நிகழை குறிப்பிடுகிறார்.


அவர்தம் இந்தியாவின் முதலமைச்சராக இருந்த நேரு

தன்னை அறிதல் சிறுகதை

தன்னை அறிதல்



யாழினி நீ ஏன் பெயர் கொடுக்க வில்லை ? என ஆசிரியர் கேட்ட வினாக்களுக்கு விடை  என்ன கூறுவது என தெரியாமல்  நின்றாள்.
நாளை ஒரு நாள் தான் இருக்கிறது எண்ணி முடிவு சொல் என்று 
கூறியவாறே வகுப்பிலிருந்து வெளியே சென்றார்.


யாழினி உன் மீது நாங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம் 
உன் அழகான கையெழுத்தும், செறிவான கருத்தும் கட்டுரை போட்டியில் 
உனக்கு பரிசு பெற்று தருமல்லவா  , ஆனால் நீயோ போட்டியில் 
கலந்து கொள்ள மருக்கிறாய் . என்ன காரணம்? என்று அவருடைய தோழிகள் வினாவினர்.

எனக்கு போட்டியில் கலந்து கொள்வது என்றாலே மிகவும் அச்சமாக 
உள்ளது .நீங்கள் நினைப்பது போல் என்னால் சிறப்பாகச் செய்யமுடியுமா? என்று தெரியவில்லை. என் கட்டுரைக்கு பரிசு கிடைக்க வில்லையென்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று
யாழினி அவர்களுக்கு  பதிலளித்தல்.

நீங்க யாழினிய இருந்த என்ன  செய்வீர்கள் ? சிந்தனை செய்க

Thursday, 2 August 2018

தமிழ் மொழியின் சிறப்பு கட்டுரை

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழி.காலத்தால் மூத்தமொழி , தனித்தன்மையால்
மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது.திருத்திய பண்பும் ,சீர் திருத்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச்செம்மொழியம்.

நிலைத்த மொழி

உலகில் ஆரயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர்
மொழிநூலார். இவற்றுள் இலக்கண இலக்கிய வளமுடைய மொழிகள்
மூவாயிரம் ஈராயிரமண்டிற்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ்,சீனம், சமற்கிருத்தம், இலத்தின் ,ஈப்ரு, கிரேக்கம் , ஆகியன

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழமையும் , வளமையும், மட்டும் போதா அம்மொழி ,பேச்சு மொழியாக ,எழுத்துமொழியாக, ஆட்சிமொழியாக ,நீதிமன்ற மொழியாகப், பயிற்றுமொழியாக நிலைபெற்றிடல் வேண்டும்.

உலக  இலக்கியங்களுள் முத்தன்மை  பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள்.இவற்றின் மொத்த அடிகள்26,350. அக்காலத்தே  இவ்வளவிற்கு விரிவாக உருவாக்க பட்ட  இலக்கியங்கள்  உலகில் வேறு
எமமொழியிலும் இல்லை  என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த
கமில்சுவலப்பில் என்னும் செக் நாட்டு மொழியியல் பேரறிஞர் முடிபு

இவ்வாறு செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி தமிழ் மொழி  தமிழைச்
செம்மொழியான அறிவித்தல்வேண்டும். என்ற முயர்ச்சி 1901 இல்
தொடங்கி 2004 வரைத் தொடர்ந்தது.நடுவனஅரசு 2004 ஆம் ஆண்டு
அகடோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது

பண்டித ஜவஹர்லால் நேரு

சுதந்திர பாரதத்தின் முதல் பண்டித ஜவஹர்லால் நேரு விடுதலை போராட்ட இயக்கத்திலேயே பெரும் பங்கு வகித்தவர் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகும் ....